“பீஹார்காரரால் குழப்பம்… அதிமுகவுக்கு தாவும் திமுக வாக்குகள்”

 

“பீஹார்காரரால் குழப்பம்… அதிமுகவுக்கு தாவும் திமுக வாக்குகள்”

தேர்தலில் பலமுனை போட்டி இருந்தாலும் களத்தில் இருமுனை போட்டி தான். அது அனைவரும் அறிந்தது தான். இதனால் பிரச்சார களத்தில் திமுக கூட்டணிக்கும் அதிமுக கூட்டணிக்குமிடையே கடும் வார்த்தை போர் நடந்துகொண்டிருக்கிறது. காரசாரமான விவாதங்களும் போய்க் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் பாமக மற்றும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்துவருகிறார். தருமபுரியில் நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

“பீஹார்காரரால் குழப்பம்… அதிமுகவுக்கு தாவும் திமுக வாக்குகள்”

அப்போது பேசிய அவர், “பாமக அங்கம் வகிக்கும் கூட்டணி சமூக நீதி கூட்டணி. 40 ஆண்டு கால போராட்டம், தியாகத்திற்குக் கிடைத்த வெற்றி வன்னியர்களுக்கு 10.5 சதவீத தனி இட ஒதுக்கீடு. இதுபோலவே, இதர பிற்பட்ட சமுதாயத்தினருக்கும் தனி இட ஒதுக்கீடு கிடைக்க வேண்டும். அதுதான் சமூக நீதி. இந்தத் தேர்தல் ஒரு விவசாயிக்கும், அரசியல் வியாபாரிக்கும் நடக்கும் தேர்தல்.

“பீஹார்காரரால் குழப்பம்… அதிமுகவுக்கு தாவும் திமுக வாக்குகள்”

இதில், நம்மில் ஒருவரான விவசாயி வெற்றி பெற்றாக வேண்டும். ஸ்டாலினுக்கு அரசியல், சமூக நீதி, சமத்துவம், வரலாறு, சரித்திரம், கணக்கு எதுவுமே தெரியாது. கருணாநிதியின் மகன் என்ற ஒரு தகுதி மட்டுமே உள்ளது. ஸ்டாலின் தன் கட்சிக்காரர்களைவே நம்பவில்லை. பீஹாரிலிருந்து பிரசாந்த் கிஷோர் என்பவரை அழைத்து வந்து, தன்னை முதல்வராக்க கூலி கொடுத்துள்ளார். இதனால் ஸ்டாலின் மீது கோபத்தில் உள்ள திமுகவினர் பலர் இந்த தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு வாக்களிக்க உள்ளனர்”