தினகரனுடன் தொடர்பில் உள்ளார்…ஓபிஎஸ் குறித்த ரகசியங்களை வெளியிடுவதாக தங்க தமிழ்ச்செல்வன் அறிவிப்பு!

 

தினகரனுடன் தொடர்பில் உள்ளார்…ஓபிஎஸ் குறித்த ரகசியங்களை வெளியிடுவதாக தங்க தமிழ்ச்செல்வன் அறிவிப்பு!

தினகரனுடன் ஓ பன்னீர் செல்வத்திற்கு தற்போது வரை தொடர்பு இருப்பதாக திமுகவை சேர்ந்த தங்கத்தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.

தேனி மாவட்டம் போடியில் நேற்று திமுக அரசை எதிர்த்து அதிமுக ஆர்ப்பாட்டம் செய்தது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஓ பன்னீர்செல்வம், “அதிமுகவுக்கு துரோகம் செய்தவர் தங்க தமிழ்ச் செல்வன்; ஜெயலலிதாவுக்காக ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ய மறுத்தவர்” என்றார். இதுகுறித்து திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன், திமுக ஆட்சிக்கு வந்த மூன்று மாதத்தில் வேறு எந்த முதல்வரும் செய்யாத அளவுக்கு முதல்வர் ஸ்டாலின் சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதனால் தான் தமிழகத்தில் கொரோனா முற்றிலுமாக ஒழிந்துள்ளது. இதை பொறுத்துக்கொள்ள முடியாமல் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் எதிர்க்கட்சி என்ற வரிசையில் பாஜகவிடம் மண்டியிட்டு தன்னுடைய இயலாமையை காட்ட முடியாமல் இன்றைக்கு திமுக அரசை கண்டித்து மதிமுக ஆர்ப்பாட்டம் செய்துள்ளது.

தினகரனுடன் தொடர்பில் உள்ளார்…ஓபிஎஸ் குறித்த ரகசியங்களை வெளியிடுவதாக தங்க தமிழ்ச்செல்வன் அறிவிப்பு!

இது மிகப்பெரிய தவறாகும்.அதிமுக ஆர்ப்பாட்டத்தின்போது ஓ. பன்னீர்செல்வம் என்னைப் பற்றி குறை கூறியது முற்றிலும் தவறு. 2002ஆம் ஆண்டு சட்டமன்ற கூட்டத் தொடரின் போது அப்போதைய சபாநாயகராக இருந்த காளிமுத்துவையும், என்னையும் அழைத்த ஜெயலலிதா ராஜினாமா செய்யுமாறு கேட்டபோது எப்போது ராஜினாமா செய்ய வேண்டும் என்று சொல்வதாக கூறினார். ராஜினாமா செய்வது வேறு யாருக்கும் தெரியக்கூடாது என்று அவர் கேட்டுக்கொண்டார். எனது மனைவி மற்றும் உறவினர்களுக்கு கூட தெரியாது. நான் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தது அனைவருக்கும் தெரியும்.

தினகரனுடன் தொடர்பில் உள்ளார்…ஓபிஎஸ் குறித்த ரகசியங்களை வெளியிடுவதாக தங்க தமிழ்ச்செல்வன் அறிவிப்பு!

நான் அதிமுகவுக்கு விசுவாசமாக இருந்தேன். ஆண்டிப்பட்டி தொகுதியில் ஜெயலலிதாவுக்கு எதிராக நான் வேட்பாளராக நிறுத்தப்பட்டபோது கூட நான் அவருக்கு அவருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தேன். ஜெயலலிதாவுக்குப் பிறகு அதிமுகவில் ஊழல் நிறைந்துவிட்டது. இதனால் அங்கிருந்து வேறு கட்சிக்கு சென்று தற்போது திமுகவில் உள்ளேன். திமுக மாவட்ட செயலாளர் பொறுப்பு வழங்கிய தலைவர் ஸ்டாலின் சட்டமன்ற தேர்தல் தொகுதியில் போட்டியிடுவதற்கு எனக்கு வாய்ப்பளித்தார்.

தினகரனுடன் தொடர்பில் உள்ளார்…ஓபிஎஸ் குறித்த ரகசியங்களை வெளியிடுவதாக தங்க தமிழ்ச்செல்வன் அறிவிப்பு!

தேர்தலில் தோல்வியடைந்திருந்தாலும் அதிகாரிகளின் துணையுடன் நான் அங்குள்ள மக்களுக்கு உதவி புரிந்து வருகிறேன். ஆனால் ஓ.பன்னீர்செல்வம் என்னைப் பற்றி அவதூறான கருத்துக்களை பேசி வருகிறார். ஜெயலலிதா உயிருடன் இருக்கும்போதே சசிகலாவின் புகைப்படத்தை தனது வீட்டில் வைத்திருந்து அவருக்கு விசுவாசமாக இருந்தவர் ஓபிஎஸ். அடுத்தடுத்து பல தகவல்களை வெளியிட இருக்கிறேன். தைரியம் இருந்தால் பன்னீர்செல்வம் அதற்கு பதிலளிக்கட்டும் ” என்றார்.