திமுக குறிவைக்கும் ‘அந்த 3 அமைச்சர்கள்’!

 

திமுக குறிவைக்கும் ‘அந்த 3 அமைச்சர்கள்’!

தமிழகத்தின் ஆட்சி கடந்த 10 ஆண்டுகாலமாக அதிமுக வசம் இருக்கிறது. ஜெயலலிதா மறைந்த பிறகு அதிமுக ஆட்சி நிலைத்து நிற்காது என ஸ்டாலின் எதிர்பார்த்தார். அது நடக்கவில்லை. மாறாக, எடப்பாடி 4 ஆண்டுகலாக திறமையாக ஆட்சி புரிந்து வருகிறார். இந்த தேர்தலிலும் ஆட்சியை கோட்டைவிட்டால் ஸ்டாலினின் முதல்வர் கனவு பாழாய் போய்விடும். வாழ்வா?சாவா? என துடித்துக் கொண்டிருக்கும் திமுக, வெற்றி வாகையை சூட பல திட்டங்களை வகுத்துள்ளது.

திமுக குறிவைக்கும் ‘அந்த 3 அமைச்சர்கள்’!

அதில் ஒன்று தான், இந்த கள ரிப்போர்ட். அதன் படி, 234 தொகுதிகளை மூன்றாக பிரித்தது திமுக. எளிதில் வெல்லக்கூடிய தொகுதி, சிரமப்பட வேண்டிய தொகுதி, அதிமுக வசமுள்ள தொகுதி என லிஸ்ட்டை உருவாக்கியது. அதிமுக வசம் இருக்கும் தொகுதி என்றால் அங்கு திமுக பெரிதாக கவனம் செலுத்தாது. இதுவரையில் அப்படி தான் இருந்தது. ஆனால் இந்த முறை, அதிமுக வசமிருக்கும் தொகுதிகளை தன் வசப்படுத்த திமுக திட்டமிட்டுள்ளது. இதனிடிப்படையில் தான் வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.

திமுக குறிவைக்கும் ‘அந்த 3 அமைச்சர்கள்’!

இந்த சூழலில் திமுக, 3 முக்கிய அமைச்சர்கள் போட்டியிடும் தொகுதிக்கு குறி வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகிறது. அந்த 3 அமைச்சர்கள் யார் என்பது சரிவர தெரியவில்லை. அவர்கள் மூவரும் அந்த தொகுதி மக்களுக்கு செய்த சேவையை லிஸ்ட் போட்டு, அதற்கு ஈடான வேட்பாளரை களமிறக்கியுள்ளதாம். கூட்டணிக் கட்சிகளும் அதற்காக உழைத்துக் கொண்டிருக்கிறார்களாம்.

திமுக குறிவைக்கும் ‘அந்த 3 அமைச்சர்கள்’!

அதிமுகவின் முக்கிய அமைச்சர்களை வீழ்த்திவிட்டால் அது திமுகவுக்கு கூடுதல் பலமாக அமையும் என திமுக தலைமை நம்புகிறது. அதை எந்த வேட்பாளர் செய்கிறாரோ அவருக்கு திமுகவில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட உள்ளதாம். இதை வைத்து பார்க்கையில் திமுக ஒரு முடிவில் தான் இருக்கிறது என்பது தெளிவாக தெரிகிறது. தேர்தல் முடிவுகள் வரட்டும்.. பொருந்திருந்து பார்ப்போம்..!