வங்கி ஊழியர்கள் போராட்டத்திற்கு திமுக ஆதரவு!

 

வங்கி ஊழியர்கள் போராட்டத்திற்கு திமுக ஆதரவு!

வங்கி ஊழியர்களின் இரண்டு நாள் வேலைநிறுத்தத்திற்கு திமுக ஆதரவு தெரிவித்துள்ளது.

வங்கி ஊழியர்கள் போராட்டத்திற்கு திமுக ஆதரவு!

அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கங்கள் பணிக் குறைப்பு, ஊதிய உயர்வு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து நாளை மறுநாள் முதல் வங்கிகள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளன. அதாவது 15,16 ஆகிய 2 தேதிகளில் வங்கி ஊழியர் சங்கங்கள் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்துள்ளது. அதன்படி வருகின்ற திங்கள் மற்றும் செவ்வாய்கிழமை வங்கிகள் செயல்படாது. மத்திய பாஜக அரசு அனைத்து பொதுத்துறை நிறுவனங்களையும் விற்கும் மனநிலையில் உள்ளது என்று வங்கி ஊழியர்கள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

வங்கி ஊழியர்கள் போராட்டத்திற்கு திமுக ஆதரவு!

இந்நிலையில் மத்திய அரசை கண்டித்து 15, 16 இல் நடைபெறும் வங்கி ஊழியர்கள் போராட்டத்திற்கு திமுக ஆதரவு தெரிவித்துள்ளது. பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கி கார்ப்பரேட் நலன் காக்கும் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து கொள்வதாகவும் திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கி ஊழியர்கள் போராட்டத்திற்கு திமுக ஆதரவு!

ஏற்கனவே இன்று மாதத்தின் 2வது சனிக்கிழமை என்பதால் வங்கிகள் இயங்கவில்லை. நாளை ஞாயிற்றுக்கிழமை விடுமுறை. இந்த சூழலில் வங்கிகள் 15,16 வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் சூழலை ஏற்படுத்தியுள்ளது.