திமுக பேசும் கதை,வசனம் மக்களிடம் எடுபடாது : அமைச்சர் உதயகுமார் விமர்சனம்!

 

திமுக பேசும் கதை,வசனம் மக்களிடம்  எடுபடாது : அமைச்சர் உதயகுமார் விமர்சனம்!

திமுக மீது மக்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா என்று அதிமுக அமைச்சர் உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

திமுக பேசும் கதை,வசனம் மக்களிடம்  எடுபடாது : அமைச்சர் உதயகுமார் விமர்சனம்!

திமுகவின் தலைவர் முக ஸ்டாலின் நேற்று காணொலி காட்சி மூலம் பேசும் போது, 2016 ஆம் ஆண்டு பாஜக -அதிமுக ஆட்சியில் இருக்கும் போது தான் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது. ஆனால் அதை மறைத்து திமுக மீது முதல்வர் பழனிசாமி குற்றசாட்டுகிறார். பழனிசாமியின் கையாலாகாத தனத்தால் தான் 13 மாண்வர்கள் தற்கொலை செய்து கொண்டதாக ஸ்டாலின் ஆவேசமாக தெரிவித்திருந்தார்.

திமுக பேசும் கதை,வசனம் மக்களிடம்  எடுபடாது : அமைச்சர் உதயகுமார் விமர்சனம்!

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயகுமார், “திமுக பேசும் கதை, வசனம் மக்களிடம் எடுபடாது. தேர்தல் எப்போது வந்தாலும் எதிர்கொள்ள அதிமுக தயாராக உள்ளது. 8 மாதத்தில் திமுக ஆட்சி வரும் என பேசுகிறார்கள். இவர்கள் மீது மக்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா? என பார்க்க வேண்டும்”என்று கூறியுள்ளார்.