‘போர்க்குரலை அறிவிக்கவிருக்கும் மு.க ஸ்டாலின்’ :டிச.23ல் இருந்து நேரடி பிரச்சாரம்!

 

‘போர்க்குரலை அறிவிக்கவிருக்கும் மு.க ஸ்டாலின்’ :டிச.23ல் இருந்து நேரடி பிரச்சாரம்!

திமுக ஆலோசனை கூட்டத்தின் முடிவில் மு.க ஸ்டாலின் ஒரு போர்க்குரலை அறிவிக்க உள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

‘போர்க்குரலை அறிவிக்கவிருக்கும் மு.க ஸ்டாலின்’ :டிச.23ல் இருந்து நேரடி பிரச்சாரம்!

அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்கிய திமுகவின் களப்பணி, கடந்த சில மாதங்களுக்கு முன்னரே தொடங்கிவிட்டது. தேர்தல் அறிக்கைக் குழு, மாவட்ட நிர்வாகிகள் நியமனம் என அதிரடியாக களமிறங்கியிருக்கும் திமுக, இந்த முறை ஆட்சியை பிடித்தே ஆக வேண்டும் என முனைப்பு காட்டி வருகிறது. இந்த நிலையில் தான், திமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.

‘போர்க்குரலை அறிவிக்கவிருக்கும் மு.க ஸ்டாலின்’ :டிச.23ல் இருந்து நேரடி பிரச்சாரம்!

ஆலோசனை கூட்டத்தின் முடிவில் அவர் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிடவிருப்பதாக தகவல் வெளியானதால், அண்ணா அறிவாலயத்தின் முன்பு ஏராளமான திமுகவினர் திரண்டுள்ளனர். ஆலோசனை கூட்டத்தில் பேசிய துரைமுருகன், “டிசம்பர் 23 முதல் ஸ்டாலின் நேரடி பிரச்சாரம் நடத்துகிறார். அன்று முதல் ஜனவரி10 வரை திமுக சார்பில் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட உள்ளது. தனது பரப்புரையில் 16,000 கிராமசபை கூட்டங்கள் நடத்தி நிர்வாகிகளை ஸ்டாலின் சந்திக்க உள்ளார்” என்று தெரிவித்தார்.

மேலும், “கூட்டத்தின் இறுதியில் ஸ்டாலின் ஒரு போர்க்குரலை அறிவிக்க உள்ளார் என்றும் தேர்தல் களத்திற்கு செல்பவர்களை ஸ்டாலின் வாழ்த்தி அனுப்ப போகிறார் என்றும் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.