உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்

 

உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்

திருக்குவளையில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அக்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்

உதயநிதி ஸ்டாலின் கைதுசெய்யப்பட்டதை கண்டித்து, திருச்சியில் மத்திய பேருந்து நிலையம் மற்றும் சத்திரம் பேருந்து நிலையம் பகுதிகளில் திமுகவினர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு தமிழக அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். மறியல் போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், அவர்களை போலீசார் கைதுசெய்து அழைத்துச்சென்றனர். இதனிடையே மத்திய பேருந்து நிலையத்தில் போராட்டத்தில் கலந்துகொண்ட திமுகவினர், பேருந்தின் ஜன்னல் கண்ணாடியை உடைத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்

இதேபோல், திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் புறவழிச்சாலையில் அக்கட்சி எம்எல்ஏ வில்வநாதன் தலைமையில் திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதேபோல் திருப்பத்தூர் மற்றும் நாட்றாம்பள்ளி பகுதிகளிலும் நடைபெற்ற சாலை மறியலால் அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.