மின்கட்டண உயர்வு பிரச்னை; 21 ஆம் தேதி திமுக ஆர்ப்பாட்டம்!

 

மின்கட்டண உயர்வு பிரச்னை; 21 ஆம் தேதி திமுக ஆர்ப்பாட்டம்!

தமிழகத்தில் மின் கட்டணம் அதிகமாக வசூலிக்கப்பட்டதாக பல தரப்பினர் புகார் தெரிவித்தனர். ஆனால், மக்கள் வீட்டிலேயே இருப்பதால் மின் கட்டணம் அதிகமாகி இருப்பதாகவும் மக்களிடம் அதிகமாக வசூலிக்கவில்லை என்றும் மின் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதனால் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தலைமையில் இன்று மின்கட்டண உயர்வு குறித்து ஆலோசனை நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

மின்கட்டண உயர்வு பிரச்னை; 21 ஆம் தேதி திமுக ஆர்ப்பாட்டம்!

அதன் படி இன்று, காணொளி வாயிலாக மாவட்ட செயலாளர், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்களுடன் மு.க ஸ்டாலின் அவரது வீட்டில் இருந்து ஆலோசனை மேற்கொண்டார். இன்று நடந்த திமுக கூட்டத்தில் திமுகவின் முக்கிய பிரதிநிதிகள் அனைவரும் கலந்து கொண்ட நிலையில், அந்த கூட்டம் நிறைவடைந்தது. கூட்டத்தின் முடிவில் மின் கட்டண உயர்வுக்கு எதிரான திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவெடுக்கப்பட்டது. இந்த நிலையில் வரும் 21 ஆம் தேதி மின் கட்டண உயர்வை எதிர்த்து திமுகவினர் வீட்டில் கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என திமுக தலைமை அறிவித்துள்ளது.