பிப்ரவரி 22-ல் தமிழகத்தில் திமுக ஆர்ப்பாட்டம்!

 

பிப்ரவரி 22-ல் தமிழகத்தில் திமுக ஆர்ப்பாட்டம்!

பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து பிப்ரவரி 22-ல் தமிழகத்தில் திமுக ஆர்ப்பாட்டம் நடத்தும் என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

பிப்ரவரி 22-ல் தமிழகத்தில் திமுக ஆர்ப்பாட்டம்!

கடந்த 15 ஆம் தேதி முதல் சமையல் கேஸ் சிலிண்டர் விலை ரூ.50 அதிகரித்து ரூ.785 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த 4 ஆம் தேதி ரூ.25 உயர்ந்த நிலையில் தற்போது ரூ.50 அதிகரிக்கப்பட்டுள்ளது. கேஸ் சிலிண்டர் விலை மட்டுமின்றி பெட்ரோல், டீசல், சமையல் எண்ணெய், வெங்காயம் உள்ளிட்டவை விலையேற்றமும் சாமானிய மக்களின் கழுத்தை நெரிக்கிறது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கண்டன குரல்களை எழுப்பியுள்ளனர்.

பிப்ரவரி 22-ல் தமிழகத்தில் திமுக ஆர்ப்பாட்டம்!

இந்நிலையில் பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை கண்டித்து பிப்.22ம் தேதி திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக மாவட்டச் செயலாளர்கள் தலைமையில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மாவட்ட தலைநகரங்களில் பாஜக, அதிமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் நிலையில் மகளிர், வணிகர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.