10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளிவைக்கக்கோரி வரும் 10 ஆம் தேதி திமுக ஆர்ப்பாட்டம்!

 

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளிவைக்கக்கோரி வரும் 10 ஆம் தேதி திமுக ஆர்ப்பாட்டம்!

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஜூன் 15ஆம் தேதி முதல் ஜூன் 25ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் கட்டுக்குள் வருவதற்கு தேர்வு நடத்துவது நோய் தொற்றை அதிகரிக்கும் என இதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், வைகோ, ராமதாஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்கள், கல்வியாளர்கள், பொது மக்கள் மற்றும் மாணவர்கள் என பலரும் எதிர்ப்பை தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில் 10 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரையும் தேர்வு எழுதாமலேயே தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவர் என தெலங்கானா அரசு தெரிவித்துள்ளது.

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளிவைக்கக்கோரி வரும் 10 ஆம் தேதி திமுக ஆர்ப்பாட்டம்!

இந்நிலையில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளிவைக்கக்கோரி வரும் 10 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த திமுக தலைமையிலான 11 கட்சி கூட்டணி அறிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுடன் கலந்தாலோசித்தப் பிறகே தேர்வு தேதியை குறிக்க வேண்டும் என்றும் திமுக கூட்டணி கட்சிகள் வலியுறுத்தியுள்ளனர்.