‘பூத் ஸ்லிப்புடன் பணம்’.. கையும் களவுமாக சிக்கிய திமுக பிரமுகர்கள்!

 

‘பூத் ஸ்லிப்புடன் பணம்’.. கையும் களவுமாக சிக்கிய திமுக பிரமுகர்கள்!

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் சூழலில், பல வாக்குச்சாவடிகளில் பதற்றம் நீடிக்கிறது. இயந்திரம் கோளாறு, வேட்பாளர்கள் மோதல், தேர்தல் புறக்கணிப்பு உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. பதற்றத்தை தணித்து வாக்குப்பதிவை சுமுகமாக கொண்டு செல்ல பறக்கும் படை அதிகாரிகளும் காவல்துறையினரும் முழுவீச்சில் செயல்பட்டு வருகின்றனர்.

‘பூத் ஸ்லிப்புடன் பணம்’.. கையும் களவுமாக சிக்கிய திமுக பிரமுகர்கள்!

மற்றொரு புறம், வாக்குக்கு பணம் கொடுக்கும் அரசியல் கட்சியினரையும் அதிகாரிகள் கண்காணித்துக் கொண்டிருக்கின்றனர். கோவை தெற்கு தொகுதியில் மக்கள் வாக்களிக்க செல்லும் போது டோக்கன் கொடுத்து பணப்பட்டுவாடா நடைபெற்று வருவதாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் குற்றஞ்சாட்டியிருந்தார். அவர் கொடுத்த புகாரின் பேரில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

‘பூத் ஸ்லிப்புடன் பணம்’.. கையும் களவுமாக சிக்கிய திமுக பிரமுகர்கள்!

இந்த நிலையில், கோவை வடக்கு தொகுதியில் மணியகாரம்பாளையம் வாக்குச்சாவடியில் பூத் ஸ்லிப்புடன் பணம் கொடுத்த திமுகவினர் கையும் களவுமாக பிடிபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுகவினர் பணம் கொடுப்பதைக் கண்ட பொதுமக்கள், அவர்களை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.73 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.