விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு- பல்வேறு இடங்களில் திமுகவினர் ஆர்ப்பாட்டம்

 

விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு- பல்வேறு இடங்களில் திமுகவினர் ஆர்ப்பாட்டம்

வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு- பல்வேறு இடங்களில் திமுகவினர் ஆர்ப்பாட்டம்

திருப்பத்தூர் மாவட்ட தாலுகா அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், அக்கட்சியின் வேலூர் தொகுதி எம்.பி., கதிர் ஆனந்த் தலைமையில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். அப்போது மத்திய அரசின் வேளாண் சட்டங்களை கண்டித்தும், டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் கோஷங்கள் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்த தமிழக அரசுக்கு எதிராகவும் திமுகவினர் முழக்கமிட்டனர்.

விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு- பல்வேறு இடங்களில் திமுகவினர் ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர் மாவட்ட திமுக சார்பில், திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில்,
திருவள்ளூர் தொகுதி எம்எல்ஏ விஜி ராஜேந்திரன், பூந்தமல்லி எம்எல்ஏ கி௫ஷ்ணசாமி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டு, வேளாண் சட்டங்களை நிறைவேற்றிய பாஜக அரசையும், அதற்கு ஆதரவளித்த அதிமுக அரசையும் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.

விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு- பல்வேறு இடங்களில் திமுகவினர் ஆர்ப்பாட்டம்

ஈரோடு மாவட்டம் ஆணைக்கல் பாளையத்தில் அக்கட்சியின் தெற்கு மாவட்ட செயலாளர் முத்துசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு பிரிவுகளை சேர்ந்த .நூற்றுக்கணக்காணோர் கலந்துகொண்டு, டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து கோஷமிட்டனர். மேலும், விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டுமெனவும் அவர்கள் வலியுறுத்தினர்.