ஈரோட்டில் திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் விநியோகம்!

 

ஈரோட்டில் திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் விநியோகம்!

ஈரோடு

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 97-வது பிறந்த நாளையொட்டி, ஈரோட்டில் திமுகவினர் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடினர்.

ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட 59-வது வார்டில் நடந்த நிகழ்ச்சியில் வார்டு திமுக செயலாளர் ஆறுமுகம் தலைமையில் கட்சியினர் கருணாநிதியின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, அந்த பகுதியில் ஏழை, எளிய மக்களுக்கு தலா 5 கிலோ அரிசி, 3 கிலோ காய்கறி வீதம் 201 நபர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது.

ஈரோட்டில் திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் விநியோகம்!

இந்த நிகழ்ச்சியில், எஸ்இஎம் மில் மேலாளர் சரவணன், 5வது வார்டு முன்னாள் செயலாளர் எம் லோகநாதன் 57வது வார்டு செயலாளர் பாபு உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர். முன்னதாக, ஈரோடு தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி கலந்துகொண்டு, கருணாநிதியின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதில் மாவட்ட துணைச் செயலாளர் ஆசெந்தில்குமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதேபோல், ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் திமுகவினர் நலத்திட்ட உதவிகள் வழங்கி, கொண்டாடினர்.