“சிக்கனில் எலும்பில்லை”… கடை சப்ளையரை அடித்து காது கேட்காமல் செய்த திமுக பிரமுகர்!

 

“சிக்கனில் எலும்பில்லை”… கடை சப்ளையரை அடித்து காது கேட்காமல் செய்த திமுக பிரமுகர்!

சிக்கனில் எலும்பில்லை என்பதால் சப்ளையரை திமுக பிரமுகர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஆவடி சாலை சென்னீர்குப்பம் பகுதியில் பாண்டியன் ஓட்டல் ஒன்று உள்ளது. இங்கு கடந்த 6-ஆம் தேதி சென்னீர்குப்பம் திமுக மாணவர் அணியைச் சேர்ந்த கார்த்தி என்பவர் சிக்கன் ப்ரை வாங்கி சென்றுள்ளார். அதில் எலும்பு இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கார்த்தி, தனது நண்பருடன் அந்த ஓட்டலுக்கு சென்றுள்ளார்.

“சிக்கனில் எலும்பில்லை”… கடை சப்ளையரை அடித்து காது கேட்காமல் செய்த திமுக பிரமுகர்!

ங்கு வாக்குவாதத்தில் ஈடுபட்ட கார்த்தியை கடையின் சப்ளையர் சாகுல் அமீது சமாதானம் செய்துள்ளார். ஆனால் கார்த்தி அவரை கன்னத்தில் பளார் என்று இரண்டு முறை அறைந்துள்ளார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். கார்த்தி அறைந்ததால் சாகுல் அமீது காது கேட்காமல் போயுள்ளது. இதை தொடர்ந்து கடையின் உரிமையாளர் பூந்தமல்லி காவல்நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்துள்ளார். பின்னர் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

“சிக்கனில் எலும்பில்லை”… கடை சப்ளையரை அடித்து காது கேட்காமல் செய்த திமுக பிரமுகர்!

சமீபத்தில் பிரியாணிக்காக சண்டை போட்ட விவகாரத்தில் திமுக பிரமுகர்கள் சிலர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டது நினைவுகூறத்தக்கது.