நெருங்கும் சட்டமன்ற தேர்தல் – கூடுகிறது திமுக எம்.பி.க்கள் கூட்டம்!

 

நெருங்கும் சட்டமன்ற தேர்தல் – கூடுகிறது  திமுக எம்.பி.க்கள் கூட்டம்!

திமுக மக்களவை மற்றும் மாநிலங்களவை – உறுப்பினர்கள் கூட்டம் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

நெருங்கும் சட்டமன்ற தேர்தல் – கூடுகிறது  திமுக எம்.பி.க்கள் கூட்டம்!

தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் நடைபெறும் என்று தெரிகிறது. இதற்கான அறிவிப்பு வரும் மார்ச் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தின் பிரதான கட்சிகளான அதிமுக – திமுக கட்சிகள் ஏற்கனவே தங்கள் தேர்தல் பணிகளை தொடங்கி விட்டது. திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவை அமைத்துள்ளது. அதேபோல் மக்கள் கிராம சபை கூட்டங்கள் அதன் மூலம் மக்களின் குறைகளை கேட்டு அதை திமுக தேர்தல் அறிக்கையில் வாழ்க முடிவெடுத்துள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு கிராமங்களில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நேரடியாக மக்களை சந்தித்து வருகிறார்.

நெருங்கும் சட்டமன்ற தேர்தல் – கூடுகிறது  திமுக எம்.பி.க்கள் கூட்டம்!

இந்நிலையில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவின் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம் வரும் 26 ஆம் தேதி பகல் 12 மணிக்கு அண்ணா அறிவாலயம் முரசொலிமாறன் வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெறும் என்றும் இதில் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. நாடாளுமன்ற கூட்டத்தொடர் வரும் ஜனவரி 29 ஆம் தேதி தொடங்கும் நிலையில் தற்போது திமுகவின் மாநிலங்களவை மற்றும் மக்களவை உறுப்பினர்களுடான ஆலோசனை கூட்டத்தின் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.