இந்துக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்த அற்பத்தனமான செயலை செய்கின்றனர் : திமுக எம்.பி ஆர் எஸ் பாரதி காட்டம்!

 

இந்துக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்த அற்பத்தனமான செயலை செய்கின்றனர் : திமுக எம்.பி ஆர் எஸ் பாரதி காட்டம்!

இந்துக்களின் கடவுளர்கள் மற்றும் புராணங்கள் தொடர்பாக அவதூறான வீடியோக்களை கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனல் வெளியிட்டதால் அந்த யூடியூப் சேனலை தடை செய்யவேண்டும் என்றும், சம்மந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும் என பா.ஜ.க சார்பில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டது. இதனையடுத்து அந்த சேனலை சேர்ந்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், செந்தில்வாசன் என்பவர் கைது செய்யப்பட்டார். அதனைத்தொடர்ந்து சுரேந்திரன் என்பவர் தானாக வந்து சரண் அடைந்ததால், அவர்களை 30 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது.

இந்துக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்த அற்பத்தனமான செயலை செய்கின்றனர் : திமுக எம்.பி ஆர் எஸ் பாரதி காட்டம்!

இந்த நிலையில் இது குறித்து பேசிய திமுக எம்.பி ஆர் எஸ் பாரதி, “கந்த சஷ்டி விவகாரத்தில் முருகரை பழித்து பேசியது மிகவும் கண்டிக்கத்தக்கது. கறுப்பர் கூட்டத்திற்கு திமுக ஆதரவு அளிப்பதாக மு.க ஸ்டாலின் பெயரில் போலியான தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இந்துக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த இப்படி அற்பத்தனமான செயலை செய்கின்றனர். கருணாநிதி ஆட்சியில் இந்தக் கோயில்கள் அனைத்தும் பாதுகாக்கப்பட்டன. திமுகவில் ஒரு கோடிக்கும் மேற்பட்டவர்கள்  இந்துக்களாக உள்ளனர்” என்று கூறினார்.