“அதிமுக ஆட்சியில் நீக்கப்பட்டது எல்லாம் திமுக ஆட்சியில் வந்து சேரும்” – ஆர்.எஸ்.பாரதி

 

“அதிமுக ஆட்சியில் நீக்கப்பட்டது எல்லாம் திமுக ஆட்சியில் வந்து சேரும்” – ஆர்.எஸ்.பாரதி

சமூக செயற்பட்டாளர் அருந்ததி ராயின் பாடப்புத்தகம் நீக்கப்பட்டதற்கு திமுக எம்.பி ஆர்.எஸ்.பாரதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

“அதிமுக ஆட்சியில் நீக்கப்பட்டது எல்லாம் திமுக ஆட்சியில் வந்து சேரும்” – ஆர்.எஸ்.பாரதி

மனோன்மணியம் பல்கலைக்கழகத்தின் ஆங்கில முதுகலை படிப்பில், சமூக போராளியான அருந்ததி ராய் புத்தகம் பாடமாக இருக்கிறது. இந்த பாடம் மாவோயிஸ்டுகள்பற்றிய கருத்துக்களை கூறுவதாக அண்மையில் புகார் எழுந்தது. இது தொடர்பாக ஆய்வு செய்ய சிண்டிகேட் கூட்டம் நடத்திய துணை வேந்தர் பிச்சுமணி, அருந்ததி ராய் பாடம் நீக்கப்படுவதாக அறிவித்தார். அதற்கு பதிலாக மாதவய்யா கிருஷ்ணன் என்பவரின் புத்தகத்தை இணைந்திருப்பதாகவும் அவர் கூறினார்.

“அதிமுக ஆட்சியில் நீக்கப்பட்டது எல்லாம் திமுக ஆட்சியில் வந்து சேரும்” – ஆர்.எஸ்.பாரதி

இதற்கு திமுக ஆ.ராசா, மதுரை எம்.பி சு.வெங்கடேசன் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில், திமுக எம்.பி ஆர்.எஸ்.பாரதியும் அருந்ததி ராய் புத்தகம் நீக்கப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அருந்ததிராய் பாடத்தை நீக்கியது போல வருங்காலத்தில் வரலாற்று தலைவர் திருவள்ளுவர் பெயரையும் நீக்குவார்கள் என்றும் அதிமுக ஆட்சியில் நீக்கப்பட்டது எல்லாம் திமுக ஆட்சியில் வந்து சேரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.