“ஆரத்தி எடுத்த பெண்களுக்கு பணம்”… வீடியோவில் சிக்கிய திமுக எம்.பி !

 

“ஆரத்தி எடுத்த பெண்களுக்கு பணம்”… வீடியோவில் சிக்கிய திமுக எம்.பி !

ஆரத்தி எடுத்த பெண்களுக்கு நாமக்கல் திமுக எம்.பி. பணம் வழங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“ஆரத்தி எடுத்த பெண்களுக்கு பணம்”… வீடியோவில் சிக்கிய திமுக எம்.பி !

சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் திமுகவுடன் காங்கிரஸ், விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட பல கட்சிகள் இணைந்துள்ளன. அதே போல் அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் உள்ளன.தொகுதி பங்கீடு, வேட்பாளர் பட்டியல், தேர்தல் அறிக்கை என அனைத்தும் நிறைவுற்ற நிலையில் தற்போது தீவிரமான பரப்புரை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அதேசமயம் வாக்குக்கு பணம் வாங்கக்கூடாது . வாக்களிப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமை என்று தேர்தல் ஆணையம் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில் பணம்பட்டுவாடா முறைகேடுகளும் ஆங்காங்கே நடந்து வருகிறது.

“ஆரத்தி எடுத்த பெண்களுக்கு பணம்”… வீடியோவில் சிக்கிய திமுக எம்.பி !

இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக திமுக சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி எம்.பி ஏ.கே.பி சின்ராஜ் வாக்கு சேகரித்து வந்தார். அப்போது திருச்செங்கோடு பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டு கொண்டிருந்த அவருக்கு அப்பகுதி பெண்கள் ஆரத்தி எடுத்தனர். இதை தொடர்ந்து தனது பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுத்த அவர் அதை தனது உதவியாளரிடம் கொடுத்து, பெண்களுக்கு கொடுக்க சொன்னார். இதற்கான வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகி உள்ளது.சமீபத்தில் அதிமுக நத்தம் விஸ்வநாதன் ஆர்த்தி எடுத்த பெண்களுக்கு பணம் வழங்கியது, சென்னை சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் அதிமுக சிறுபான்மை பிரிவு துணைச்செயலாளர் ஜெ.எம்.பஷீர் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்த வீடியோ என பல பேர் சிக்கி வருகின்றனர்.