திமுக எல்எல்ஏ மகன் உயிரிழப்பு : முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!!

 

திமுக எல்எல்ஏ மகன் உயிரிழப்பு : முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!!

திமுக எம்எல்ஏ பிரகாஷ் மகன் விபத்தில் உயிரிழந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

திமுக எல்எல்ஏ மகன் உயிரிழப்பு : முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!!

ஓசூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் மகன் கருணாசாகர் சென்ற கார் விபத்தில் சிக்கி ஏழு பேர் பலியாகினர். திமுக எம்எல்ஏவும், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயலாளருமான பிரகாஷின் மகன் கருணாசாகர் தனது நண்பர்கள் 6 பேருடன் ஆடி காரில் பயணித்துள்ளார் . கோரமங்களா பகுதியில் திடீரென ஏற்பட்ட விபத்து காரணமாக காரில் பயணித்த 7 பேர் உயிரிழந்தனர். சாலை தடுப்பில் மோதி கார் கட்டுப்பாட்டை இழந்ததால் இந்த விபத்து நடந்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்தில் இறந்தவரின் உடல் மீட்கப்பட்டு பெங்களூரு செயின்ட் ஜான்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெரும் சோகத்தை உண்டாக்கியுள்ளது.

திமுக எல்எல்ஏ மகன் உயிரிழப்பு : முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!!

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், “கழகத்தின் ஓசூர் சட்டப்பேரவை உறுப்பினர் பிரகாஷ் அவர்களின் மகன் கருணாசாகர் பெங்களூரு அருகே நிகழ்ந்த கோரமான சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தது அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். கோர விபத்துக்கு தன் அன்பு மகனை பறிகொடுத்த இருக்கும் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் அவர்களுக்கு எப்படி ஆறுதல் கூறுவது என தெரியவில்லை. அன்பு மகனை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் ,நண்பர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.