கோவையில் கொரோனா ஆபத்தை மறைத்தால், அது பேராபத்தாக மாறும்! – தி.மு.க எம்.எல்.ஏ எச்சரிக்கை

 

கோவையில் கொரோனா ஆபத்தை மறைத்தால், அது பேராபத்தாக மாறும்! – தி.மு.க எம்.எல்.ஏ எச்சரிக்கை

கோவையில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை பற்றி பல தவறான தகவல் பரவி வருகிறது, தமிழக அரசு கோவையில் கொரோனாத் தொற்று இல்லை என்று மறைக்க முயன்றால் அது பேராபத்தாக மாறிவிடும் என்று தி.மு.க எம்.எல்.ஏ காத்த்திக் எச்சரிக்கைவிடுத்தள்ளார்.

கோவையில் கொரோனா ஆபத்தை மறைத்தால், அது பேராபத்தாக மாறும்! – தி.மு.க எம்.எல்.ஏ எச்சரிக்கைஇது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா வைரஸ் தொற்று துவக்கத்திலிருந்து, பரிசோதனை மூலம் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் மற்றும் இறப்பு குறித்து அரசு தினமும் வெளியிடும் தகவல்களில் வெளிப்படைத்தன்மை இல்லை என்று தி.மு.க. உள்ளிட்ட மக்கள் நலனில் அக்கறையுள்ள அரசியல் கட்சிகள் தொடர்ச்சியாக வலியுறுத்தியதன் பிறகே- ஜூன் 7-ம் தேதிக்குப் பிறகு, மாவட்ட வாரியாக பரிசோதனை குறித்து ஒருநாள் மட்டும் தகவல் வெளியிட்டார்கள். பின்பு அதுவும் நிறுத்தப்பட்டுவிட்டது.

கோவையில் கொரோனா ஆபத்தை மறைத்தால், அது பேராபத்தாக மாறும்! – தி.மு.க எம்.எல்.ஏ எச்சரிக்கைஇந்த நிலையில் நேற்று முன்தினம் , கோவை செல்வபுரம் சுற்றியுள்ள பகுதிகளில், 200 பேருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் , 116 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், சுகாதாரத் துறை இதை மறுத்துள்ளதோடு, அப்பகுதியில், 35 பேருக்கு மட்டுமே பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. கோவையில் , கொரோனா நோய்ப் பரவல் இல்லை. நோய்த் தொற்று குறைகிறது அல்லது நோய்த் தொற்றே இல்லை என்று போலியாக காட்ட நினைக்கிறதா கோவை மாவட்ட நிர்வாகம்?
கொரோனாவை பொறுத்தவரை ஆபத்தை மறைக்க மறைக்க, அது பேராபத்தாக மாறும். கோவையில் நாளுக்கு நாள் வைரஸ் தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதே இதற்கு உதாரணம்.

http://


இனிவரும் காலங்களிலாவது, கோவையில் கொரோனா வைரஸ் பரிசோதனைகளை பரவலாக்கி, தொற்று பாதிக்கப்பட்டவர்களின் உண்மையான தகவலைப் பொதுமக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும் இந்தத் தொற்று பரவுதல் மற்றும் இதைக் கட்டுப்படுத்துதல் விஷயத்தில் கோவை மாவட்ட நிர்வாகம் மிகவும் விழிப்புடனும், திறந்த மனதுடன் இருக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.