“சட்டமன்ற உறுப்பினராக என் பணிகளை தொடங்குகிறேன்” : உதயநிதி ஸ்டாலின் நெகிழ்ச்சி!

 

“சட்டமன்ற உறுப்பினராக என் பணிகளை தொடங்குகிறேன்” : உதயநிதி ஸ்டாலின் நெகிழ்ச்சி!

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பதவியேற்றுக் கொண்டார்.

தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் இன்று காலை கலைவாணர் அரங்கில் கூடியது. அப்போது முதல்வர் மு.க. ஸ்டாலின் எம்எல்ஏவாக பதவி ஏற்றுக்கொண்டார் அவரைத் தொடர்ந்து 31 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர். இதையடுத்து எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் ,திமுக எம்எல்ஏக்கள் என பலரும் சட்டமன்ற உறுப்பினர்கள் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

“சட்டமன்ற உறுப்பினராக என் பணிகளை தொடங்குகிறேன்” : உதயநிதி ஸ்டாலின் நெகிழ்ச்சி!

அந்த வகையில் சட்டப்பேரவையில் முதல் முறையாக எம்எல்ஏவாக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்றுக் கொண்டார் . நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் வெற்றிபெற்ற உதயநிதி ஸ்டாலின் இன்று எம்எல்ஏவாக பதவி ஏற்றார்.

இந்நிலையில் திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், ” தமிழகத்தின் பாரம்பரியமும்-பெருமையும் கொண்ட சட்டமன்றம் இன்று கூடியபோது சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டேன். இந்த மகத்தான வாய்ப்பை வழங்கிய மாண்புமிகு முதல்வர் – தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உள்ளிட்ட தலைமைக்கழகத்தினர் – தொகுதி மக்கள்- எனக்காக களப்பணியாற்றிய கழகத்தினர் – தோழமைக்கட்சியினர் உட்பட அனைவருக்கும் என் அன்பும் நன்றியும். இந்த பெருமைமிகு தருணத்தில், தொகுதி மக்களின் தேவையறிந்து அவற்றை நிறைவேற்றும் வண்ணம் உழைப்பேன் என்ற உறுதியுடன் சட்டமன்ற உறுப்பினராக என் பணிகளை தொடங்குகிறேன் ” என்று பதிவிட்டுள்ளார்.