“நம்ம ஜெயிசிட்டோம் தாத்தா” டிஆர்பி ராஜா நெகிழ்ச்சி!

 

“நம்ம ஜெயிசிட்டோம் தாத்தா” டிஆர்பி ராஜா நெகிழ்ச்சி!

திமுக என்ற வார்த்தையே எட்டு திக்கிலும் தற்போது ஒலித்துக்கொண்டிருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளாக எதிர்க்கட்சியாக இருந்த திமுக தற்போது ஆளும் கட்சியாக உயர்ந்துள்ளது. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 159 இடங்களில் திமுக கூட்டணி வெற்றி பெற்று மாபெரும் வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளது. அதில் திமுக தனிப்பெரும்பான்மை நிரூபித்து ஆட்சிக் கட்டிலில் அமர உள்ளது. கிட்டத்தட்ட 40 ஆண்டு கால அரசியல் வாழ்க்கைக்கு பரிசாக தமிழகத்தின் அடுத்த முதல்வராக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பதவி ஏற்க உள்ளார்.முக ஸ்டாலின் தலைமையிலான சட்டமன்றத்தில் பல இளம் வேட்பாளர்களும் எம்எல்ஏக்கள் ஆக பங்கேற்க உள்ளனர்.

“நம்ம ஜெயிசிட்டோம் தாத்தா” டிஆர்பி ராஜா நெகிழ்ச்சி!

இந்த சூழலில் டிஆர் பாலுவின் மகனான டிஆர்பி ராஜாவுக்கு கடந்த முறை மன்னார்குடியில் வெற்றபெற்று சிட்டிங் எம்எல்ஏவாக இருக்கும் நிலையில் அதே தொகுதியில் மீண்டும் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளார். மன்னார்குடியில் டிஆர்பி ராஜாவை எதிர்த்து போட்டியிட்ட சிவா ராஜாமாணிக்கம் 37 ஆயிரத்து 393 வாக்கு வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்துள்ளார்.

இந்நிலையில் மன்னார்குடியில் வெற்றிபெற்றதற்கான சான்றிதழுடன் திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி நினைவிடத்திற்கு சென்ற அவர், கருணாநிதியிடம் திருவுருவ படத்திற்கு முத்தமிட்டு வணங்கியுள்ளார்.அத்துடன் இதற்கான புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ள டிஆர்பி ராஜா, நம்ம ஜெயிசிட்டோம் தாத்தா என்று பதிவிட்டுள்ளார்.