தற்கொலைக்கு முயற்சி செய்யவில்லை; உடல்நலக்குறைவால் மயங்கிவிழுந்தேன் – திமுக எம்எல்ஏ பூங்கோதை

 

தற்கொலைக்கு முயற்சி செய்யவில்லை; உடல்நலக்குறைவால் மயங்கிவிழுந்தேன் – திமுக எம்எல்ஏ பூங்கோதை

திமுக எம்எல்ஏ பூங்கோதை ஆலடி அருணா நேற்று தற்கொலை முயற்சித்தாக செய்திகள் வெளியானது. நெல்லையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவரை மேல் சிகிச்சைக்காக சென்னையிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் உட்கட்சி பூசல் காரணமாக மன உளைச்சலில் அதிகளவு துக்க மாத்திரைகளை உட்கொண்டதாக கூறப்பட்டது. திமுகவில் அரசியல் செல்வாக்குடன் வலம் வந்த இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது திமுகவினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தற்கொலைக்கு முயற்சி செய்யவில்லை; உடல்நலக்குறைவால் மயங்கிவிழுந்தேன் – திமுக எம்எல்ஏ பூங்கோதை

இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளித்துள்ள திமுக எம். எல்.ஏ பூங்கோதை ஆலடி அருணா, “தற்கொலைக்கு முயன்றதாக வெளியான தகவல் தவறானது, திரித்து கூறப்பட்டுள்ளது. உடல்நலக்குறைவு காரணமாக திடீரென்று மயங்கி விழுந்தேன். சென்னையிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறேன். திமுக் தலைவர் ஸ்டாலின் என் வளர்ச்சிகு உறுதுணையாக இருந்து வருகிறார். இத்தகைய சூழலில் கட்சிக்கு ஊறுவிளைவிக்கும் விதமாக தவறான செய்திகளை யாரும் பரப்ப வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” எனக் கூறினார்.

திமுகவில் முன்னாள் பெண் அமைச்சருக்கே பாதுகாப்பு இல்லை; பூங்கோதை ஆலடி அருணாவிற்கே இந்த கதி என்றால் சாதாரண திமுக தொண்டனின் நிலை என்ன? என பாஜக மாநில தலைவர் முருகன் விமர்சித்திருந்தது குறிப்பிடதக்கது.