“35 ஆண்டுகளாக என் களைப்பை போக்கிய அருமருந்து என் அன்பு” : எம்எல்ஏ மா.சுப்ரமணியம் உருக்கம்!

 

“35 ஆண்டுகளாக என் களைப்பை போக்கிய அருமருந்து என் அன்பு” : எம்எல்ஏ மா.சுப்ரமணியம் உருக்கம்!

திமுக எம்எல்ஏ மா.சுப்ரமணியம் தனது மகன் மறைவு குறித்து உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

“35 ஆண்டுகளாக என் களைப்பை போக்கிய அருமருந்து என் அன்பு” : எம்எல்ஏ மா.சுப்ரமணியம் உருக்கம்!

சைதாப்பேட்டை திமுக எம்எல்ஏ மா. சுப்ரமணியன் பலருக்கும் பரிட்சயமானவர். எளியவர்களும் சென்று எளிதாக அணுக கூடிய இவர் கட்சி பேதமின்றி பலருக்கும் பேவரைட். மாரத்தான் ஓட்டம், யோகா, உடற்பயிற்சி என என்றும் இளமை, புன்னகை பூக்கும் முகம் என வலம்வரும் இவரின் வாழ்க்கையில் கடந்த சில நாட்களுக்கு நடந்த துயரம் அவரது இளைய மகன் அன்பழகனின் மறைவு.

“35 ஆண்டுகளாக என் களைப்பை போக்கிய அருமருந்து என் அன்பு” : எம்எல்ஏ மா.சுப்ரமணியம் உருக்கம்!

34 வயதான அன்பழகன் போலியோவால் பாதிக்கப்பட்டு தனது கடினமான நாட்களை பெற்றோரின் துணையுடன் எளிதாக கடந்த வந்தார். இருப்பினும் கொரோனா பாதிப்பால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர் குணமாகி வீடு திரும்பிய நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்நிலையில் தனது மகனுடனான அழகான நினைவுகள் கொண்ட புகைப்படங்களை மா.சுப்ரமணியம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், கடந்த 35 ஆண்டுகளாக என் களைப்பை போக்கிய அருமருந்து என் “அன்பு”. என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார். தனது மகனுடன் செல்ல சண்டை , விளையாட்டு என அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் காண்போரை கலங்கச்செய்துள்ளது.