கொரோனாவால் பாதிக்கப்பட்ட திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் நிலைமை கவலைக்கிடம்!

 

கொரோனாவால் பாதிக்கப்பட்ட திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் நிலைமை கவலைக்கிடம்!

சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி திமுக எம்.எல்.ஏ ஜெ. அன்பழகனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தொற்று ஏற்பட்டதையடுத்து சிகிச்சைக்காக குரோம்பேட்டை ஜெகத்ரட்சகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் நிலைமை கவலைக்கிடம்!

இந்நிலையில் தனியார் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும், தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள ஜெ.அன்பழகனுக்கு உயிர்காக்கும் கருவி மூலம்
80 சதவீத ஆக்சிஜன் செலுத்தப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் அன்பழகனின் உடல் நிலையில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.