தந்தை பழக்கடை ஜெயராமன் கல்லறை அருகில் ஜெ.அன்பழகன் உடல் அடக்கம் செய்யப்படுகிறது!

 

தந்தை பழக்கடை ஜெயராமன் கல்லறை அருகில் ஜெ.அன்பழகன் உடல் அடக்கம் செய்யப்படுகிறது!

கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் இன்று காலை மணிக்கு காலமானார். அவருக்கு வயது 62.

தந்தை பழக்கடை ஜெயராமன் கல்லறை அருகில் ஜெ.அன்பழகன் உடல் அடக்கம் செய்யப்படுகிறது!

மூன்று முறை எம்எல்ஏவாக இருந்த அவர் 2001 இல் தி.நகரிலும் 2011 மற்றும் 16 இல் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் வெற்றி பெற்றார். 15 ஆண்டுகளுக்கு மேலாக திமுகவின் மாவட்ட செயலாளராக இருந்த இவர் கொரோனா நேரத்திலும் தீவிரமாக களப்பணியில் ஈடுபட்டு வந்தார். ஜெ.அன்பழகன் மறைவிற்கு திமுக தலைவர் முக ஸ்டாலின், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எம்பி கனிமொழி உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தந்தை பழக்கடை ஜெயராமன் கல்லறை அருகில் ஜெ.அன்பழகன் உடல் அடக்கம் செய்யப்படுகிறது!

இந்நிலையில் குரோம்பேட்டை தனியார் மருத்துவமனையில் இருந்து ஜெ.அன்பழகன் உடல் முழுவதும் மூடப்பட்டு சவப்பெட்டியில் வைக்கப்பட்டு பாதுக்காப்பாக எடுத்து செல்லப்பட்டுள்ளது. அவரின் உடல் கண்ணம்மாபேட்டை இடுகாட்டில் அவரது தந்தை ஜெயராமன் கல்லறை அருகே புதைக்கப்பட உள்ளது. இதற்காக 15 அடி ஆழம் குழி தோண்டப்பட்டு வருகிறது. கொரோனாவால் இறந்தவர் உடலை எவ்வாறு அடக்கம் செய்ய வேண்டும் என்ற வழிமுறைகள் உள்ளதோ அதன்படியே அவரின் உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.