தி.மு.க எம்.எல்.ஏ-வை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி! – செங்கல்பட்டு நீதிமன்றம் அதிரடி

 

தி.மு.க எம்.எல்.ஏ-வை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி! – செங்கல்பட்டு நீதிமன்றம் அதிரடி

நிலத்தகராறு தொடர்பாக துப்பாக்கியால் சுட்டதாக கைது செய்யப்பட்ட தி.மு.க எம்.எல்.ஏ இதயவர்மனை ஒரு நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

தி.மு.க எம்.எல்.ஏ-வை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி! – செங்கல்பட்டு நீதிமன்றம் அதிரடி
நிலத்தகராறு காரணமாக ரியல் எஸ்டேட் உரிமையாளரை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாக திருப்போரூர் தி.மு.க எம்.எல்.ஏ இதயவர்மன் கைது செய்யப்பட்டார். அவர் வீட்டில் சோதனையிட்டபோது ஏராளமான அனுமதி இல்லாத துப்பாக்கி, தோட்டாக்கள், தோட்டா தயாரிக்க உதவும் கருவி சிக்கியது. இதைத் தொடர்ந்து ஜாமீன் கேட்டு அவர் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

தி.மு.க எம்.எல்.ஏ-வை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி! – செங்கல்பட்டு நீதிமன்றம் அதிரடி
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது எம்.எல்.ஏ-வை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். மேலும், வீட்டில் ஏராளமான துப்பாக்கி, தோட்டா சிக்கியதால் இது தொடர்பாக எம்.எல்.ஏ-விடம் விசாரணை நடத்த வேண்டும். இதற்கு நீதிமன்றம் அனுமதிக்க வேண்டும் என்று செங்கல்பட்டு நீதிமன்றத்தில் போலீஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
ஒரே ஒரு நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதைத் தொடர்ந்து இதயவர்மனை போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.