“ஸ்டாலின் வேலை எடுத்தது சூரசம்ஹாரம் செய்யத்தான்” – துரைமுருகன் பேச்சு!

 

“ஸ்டாலின் வேலை எடுத்தது சூரசம்ஹாரம் செய்யத்தான்” – துரைமுருகன் பேச்சு!

திமுக கூட்டணிக்கு புதிய கட்சிகள் வந்தால் சேர்த்துக் கொள்வதில் தவறு இல்லை என்று திமுக எம்எல்ஏ துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

“ஸ்டாலின் வேலை எடுத்தது சூரசம்ஹாரம் செய்யத்தான்” – துரைமுருகன் பேச்சு!

திமுகவை இந்து விரோத கட்சி என தொடர்ந்து அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் விமர்சித்து வருகின்றன. திமுக தலைவர் ஸ்டாலின் இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவிப்பதில்லை; அவர் கட்சியில் இந்து மக்கள் இல்லையா? என சிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த சூழலில் திருத்தணியில் நடந்த மக்கள் கிராமசபை கூட்டத்தில் கலந்து கொண்ட ஸ்டாலினுக்கு, திமுகவினர் வெள்ளி வேலை பரிசாக அளித்தார். அதை கையில் வாங்கிய படி ஸ்டாலின் நின்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. தேர்தலுக்காக ஸ்டாலின் இரட்டை வேடம் போடுவதாக முதல்வர் பழனிசாமி, எல். முருகன், அமைச்சர் செல்லூர் ராஜூ உள்ளிட்டோர் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள்.

“ஸ்டாலின் வேலை எடுத்தது சூரசம்ஹாரம் செய்யத்தான்” – துரைமுருகன் பேச்சு!

இந்நிலையில் வேலூரில் செய்தியாளர்களை சந்தித்த திமுக பொதுச்செயலாளரும், எம்எல்ஏ-வுமான துரைமுருகன், மு.க. ஸ்டாலின் கையில் வேலை எடுத்தது அதிமுகவை சூரசம்ஹாரம் செய்யத்தான். திமுக கூட்டணிக்கு புதிய கட்சிகள் வந்தால் சேர்த்துக் கொள்வதில் தவறு இல்லை ” என்றார். அதேபோல் இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள திமுக அமைப்பு செயலாளர் ஆர். எஸ். பாரதி, “அறுபடை முருகனின் அருள் ஸ்டாலினுக்கு உள்ளது. பாஜக முருகனின் அருள் தான் முதல்வருக்கு உள்ளது. ஸ்டாலினுக்கு இருக்கும் மக்கள் செல்வாக்கையும், வரவேற்பையும் பார்த்து முதல்வர் மிரண்டு போய் உள்ளார்” என்றார்.