“ஆரம்பிக்கவே இல்ல அதுக்குள்ள அலப்பறை” : ஆட்சிக்கு வரும் முன்னரே கூட்டணி கட்சியினரை மிரட்டிய திமுக எம்எல்ஏ

 

“ஆரம்பிக்கவே இல்ல அதுக்குள்ள அலப்பறை” : ஆட்சிக்கு வரும் முன்னரே கூட்டணி கட்சியினரை மிரட்டிய திமுக எம்எல்ஏ

திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணனுக்கும் விசிக மாவட்ட செயலாளருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது கூட்டணியில் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் திமுக – அதிமுக கட்சிகள் மாறி மாறி ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி வருகின்றனர். கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் அமராத திமுக , தொடர்ந்து அதிமுக அரசுக்கு எதிரான தனது கருத்துக்களை பதிவு செய்து வருகிறது. அதேசமயம் திமுகவுக்கு எதிரான பல குற்றச்சாட்டுகளை ஆளும் அதிமுக தரப்பினர் தொடர்ந்து முன்வைத்து வருகின்றனர்.

“ஆரம்பிக்கவே இல்ல அதுக்குள்ள அலப்பறை” : ஆட்சிக்கு வரும் முன்னரே கூட்டணி கட்சியினரை மிரட்டிய திமுக எம்எல்ஏ

இந்த சூழலில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கும் விசிக மாவட்ட செயலாளர் முரசு தமிழப்பனுக்கும் சமீபத்தில் பிரச்சனை வெடித்துள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தூத்துக்குடி தெற்கு மாவட்ட ஊராட்சித் தலைவர் சமீபத்தில் திமுகவில் இணைந்தார். இதற்கு காரணம் அனிதா ராதாகிருஷ்ணன் தான் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் மாவட்டச் செயலாளர் முரசு தமிழப்பன் அனிதா ராதாகிருஷ்ணனிடம் கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் ஏற்பட்ட பிரச்சனையில் அவர் முரசு தமிழப்பனுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்து முரசு தமிழப்பன் போலீசில் புகார் அளித்துள்ளார். ஆனால் முரசு தமிழப்பனின் புகாரை ஏற்க மறுத்த போலீசார் அனிதா ராதாகிருஷ்ணனிடம் புகாரைப் பெற்றுக்கொண்டு விசாரணை நடத்த தொடங்கியுள்ளனர். இதனால் விசிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.

“ஆரம்பிக்கவே இல்ல அதுக்குள்ள அலப்பறை” : ஆட்சிக்கு வரும் முன்னரே கூட்டணி கட்சியினரை மிரட்டிய திமுக எம்எல்ஏ

இது குறித்து கூறும் விடுதலை சிறுத்தைகள் தரப்பினர், அனிதா ராதாகிருஷ்ணன் தரக்குறைவாக பேசியதாக குற்றம்சாட்டி வருகின்றன. அனிதா ராதாகிருஷ்ணன் பேசும் போது, “சில பேரு (விசிக) அதிமுக கிட்ட காசு வாங்கிட்டு கூட்டணியை உடைக்க முடியுமாண்ணு திட்டம் போடறாங்க.. ஏதாவது சாதி பிரச்சனையை கிளப்பி இப்படி திட்டம் போடறாங்க. எவனும் என்னைத் தொட்டுப் பார்க்க முடியாது. இன்னும் நாலு மாசத்தில் நம்ம ஆட்சிதான். போலீஸ் நம்ம பக்கம். அதனால எத்தனை வழக்கு போட்டாலும் கவலையில்லை. எல்லாம் பீஸ் பீசாகிடும்’’ என்று கூறியதாக தெரிகிறது. இதனாலேயே இரு தரப்புக்கும் பிரச்சினை வெடித்துள்ளது.

“ஆரம்பிக்கவே இல்ல அதுக்குள்ள அலப்பறை” : ஆட்சிக்கு வரும் முன்னரே கூட்டணி கட்சியினரை மிரட்டிய திமுக எம்எல்ஏ

சில காலமாக திமுகவினர் தொடர்ந்து அத்துமீறல்களில் ஈடுபட்டு வருவதாக அதிமுக தரப்பினர் புகார் கூறி வரும் நிலையில் கூட்டணி கட்சியான விடுதலைச் சிறுத்தைகள் உடனேயே திமுகவின் எம்எல்ஏ ஒருவர் தகராறில் ஈடுப்பட்டுள்ளது திமுக – விசிகவினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.