“கொங்கு மண்டலம் அதிமுகவின் கோட்டை என்பதை ஆழ குழிதோண்டி புதைப்போம்”

 

“கொங்கு மண்டலம் அதிமுகவின் கோட்டை என்பதை ஆழ குழிதோண்டி புதைப்போம்”

நாடாளுமன்றத் தேர்தலிலேயே அதிமுக கோட்டையில் ஓட்டை விழுந்துவிட்டது என்று மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பரப்புரையில் ஈடுபட்டு வரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெற்ற பரப்புரையில் மக்கள் மத்தியில் பேசினார்.அதில், “சுண்ணாம்பு பவுடர், பினாயில் வாங்கியதில் கூட ஊழல் செய்தவர் தான் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி .வேலுமணி .

“கொங்கு மண்டலம் அதிமுகவின் கோட்டை என்பதை ஆழ குழிதோண்டி புதைப்போம்”

ஒரு ஊராட்சிக்கு ஒரு கோடி ரூபாய் வீதம் 12 ஆயிரத்து 500 கோடி அவர் ஊழல் செய்துள்ளார். அமைச்சர் வேலுமணிக்கு வேண்டப்பட்ட நிறுவனத்தின் வருவாய் முதலில் 17 கோடியாக இருந்தது. ஆனால் அந்த நிறுவனத்தின் தற்போதைய வருவாய் 3000 சதவீதம் அதிகரித்துள்ளது. அந்த அளவிற்கு ஊழலில் திளைத்து போயுள்ளனர் அதிமுக அமைச்சர்கள்”என்றார்.

“கொங்கு மண்டலம் அதிமுகவின் கோட்டை என்பதை ஆழ குழிதோண்டி புதைப்போம்”

தொடர்ந்து பேசிய அவர், “கொங்கு மண்டலத்தில் அனைத்து தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும். கொங்கு மண்டலம் அதிமுகவின் கோட்டை என்பதை ஆழ குழிதோண்டி புதைப்போம். நாடாளுமன்றத் தேர்தலிலேயே அதிமுக கோட்டையில் ஓட்டை விழுந்துவிட்டது . தலைவர் கலைஞர் இறந்த போது அவரை அடக்கம் செய்ய 6 அடி இடம் கொடுக்காத இந்த ஆட்சியாளர்களுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் ” என்றார்.