” மானம் கெட்டுப் போய் கூட்டணி” பரப்புரையில் சீறிய ஸ்டாலின்

 

” மானம் கெட்டுப் போய் கூட்டணி” பரப்புரையில் சீறிய  ஸ்டாலின்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் காஞ்சிபுரம் உத்திரமேரூரில் திமுக மற்றும் கூட்டணி கட்சி ஆதரவாளர்களை பரப்புரை மேற்கொண்டு வருகிறார். அப்போது பேசிய அவர், “எங்கு போனாலும், விவசாயி விவசாயி என்று முதல்வர் பேசி வருகிறார். டெல்லியில் போராடும் விவசாயிகளை சந்தித்து பேச முதல்வர் தயாரா? பழனிசாமிக்கு முதல்வராக தகுதி இருக்கு என்று நினைத்து மக்கள் யாரும் அவருக்கு வாக்களிக்கஅவர் முதலமைச்சராக இருப்பதற்கு காரணம் ஜெயலலிதா மறைந்ததால் தான்.

” மானம் கெட்டுப் போய் கூட்டணி” பரப்புரையில் சீறிய  ஸ்டாலின்

அதோடு சசிகலா சிறைக்குப் போனதும் தான். ஓபிஎஸ் 3வது அணியை உருவாக்கியதும் தான். ஏறிவந்த ஏணியான சசிகலாவை எட்டி உதைக்கும் துரோகியாக தான் பழனிசாமி இருந்து கொண்டிருக்கிறார். மத்திய அரசோடு இணக்கமாக இருந்து பல திட்டங்களை, பல காரியங்களை நாங்கள் ஆட்சியில் சாதித்து இருக்கிறோம் என்று எடப்பாடி பழனிசாமி கூறிவருகிறார். நான் கலைஞரின் மகன் எதையும் ஆதாரத்துடன் தான் பேசுவேன் .முதலமைச்சராக இருக்கும் பழனிச்சாமி அவர்களே மத்திய அரசை பயன்படுத்தி எல்லா திட்டங்களை கொண்டு வந்து விட்டோம் எல்லாவற்றையும் சாதித்து விட்டோம் என்று கூறுகிறீர்களே… நான் கேட்கிறேன் வர்தா புயலின் போது தமிழக அரசு சார்பில் கேட்கப்பட்ட நிதி 22 ஆயிரத்து 573 கோடி ரூபாய். மத்திய அரசு கொடுத்தது 200 கோடி தான்” என்றார்.

” மானம் கெட்டுப் போய் கூட்டணி” பரப்புரையில் சீறிய  ஸ்டாலின்

தொடர்ந்து பேசிய அவர், “தேர்தல் வருவதால் பச்சைத் துண்டு போட்டுக் கொண்டு மக்களை ஏமாற்றுகிறார் முதல்வர். பேரிடர் பாதிப்பில் தமிழக அரசு உரிய தொகையை விட மத்திய அரசு குறைவாகவே தந்தது. நிவர் புயல், கஜா புயல் என எதையும் மத்திய அரசிடம் கேட்ட நிதி உதவி தமிழகத்திற்கு வராத நிலையில் எதற்கு மானம் கெட்டுப் போய் அவர்களுடன் கூட்டணி வைத்துள்ளீர்கள் என்று நான் உங்களைக் கேட்கிறேன்.தமிழர்களுக்கு துரோகம் செய்த பாஜக அரசுடன் தான் அதிமுக கூட்டணி வைத்துள்ளது.அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெயித்தாலும் அவர் பாஜகவின் சட்டமன்ற உறுப்பினர் தான்” என்றார்.