சிறப்பு நீதிமன்றத்தில் மு.க.ஸ்டாலின் நேரில் ஆஜர்!

 

சிறப்பு நீதிமன்றத்தில்  மு.க.ஸ்டாலின் நேரில் ஆஜர்!

சென்னை ஆட்சியர் அலுவலகத்திலுள்ள எம்பி மற்றும் எம்எல்ஏ-க்கான சிறப்பு நீதிமன்றத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ஆஜராகியுள்ளார்.

சிறப்பு நீதிமன்றத்தில்  மு.க.ஸ்டாலின் நேரில் ஆஜர்!

தமிழக அரசை தொடர்ந்து விமர்சித்து வரும் மு.க.ஸ்டாலின் கடந்த ஜனவரி மாதம் திருமண நிகழ்ச்சியின்போது முதல்வர் குறித்து அவதூறு பரப்பும் வகையில் பேசியிருந்தார். இதை தொடர்ந்து அமைச்சர் வேலுமணி உள்ளிட்ட அதிமுக அமைச்சர்கள் ஊழலில் திளைத்து இருப்பதாகவும் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து தனது சமூக வலைத்தள பக்கங்களில் குற்றம்சாட்டி வருகிறார். இதுதொடர்பாக முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மீது அவதூறு பரப்பியதாக ஸ்டாலின் மீது வழக்குகள் தொடரப்பட்டது.

சிறப்பு நீதிமன்றத்தில்  மு.க.ஸ்டாலின் நேரில் ஆஜர்!

இந்நிலையில் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் மு.க.ஸ்டாலின் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜராகியுள்ளார். முதல்வர் மற்றும் அமைச்சர்கள் குறித்து அவதூறாக பேசியதாக தமிழக அரசு தொடர்ந்த 6 வழக்குகளில் ஸ்டாலின் நேரில் ஆஜராகியுள்ளார். இதில் 4 வழக்குகள் இன்று விசாரணைக்கு வர உள்ளது.

சிறப்பு நீதிமன்றத்தில்  மு.க.ஸ்டாலின் நேரில் ஆஜர்!

ஏற்கனவே அவதூறு வழக்குகளில் ஸ்டாலினை உயர்நீதிமன்றம் கண்டித்தபோது, அரசியல் கட்சித் தலைவர் பொறுப்புடன் பேச வேண்டும் என்றும் பொதுவெளியில் தமிழக முதல்வர் குறித்து உண்மைக்கு புறம்பாக பேசுவது மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் கூறியது குறிப்பிடத்தக்கது.