திமுக பிரமுகர் படுகொலை – உறவினர்கள் சாலை மறியல்!

 

திமுக பிரமுகர் படுகொலை – உறவினர்கள் சாலை மறியல்!

திண்டுக்கல்:

திண்டுக்கல் திமுக பிரமுகர் வெட்டிக்கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகளை கைதுசெய்யக் கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் திமுக நிர்வாகி அருண்குமார். பைனான்ஸ் தொழில் செய்துவரும் அருணுக்கும், அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

திமுக பிரமுகர் படுகொலை – உறவினர்கள் சாலை மறியல்!

இந்நிலையில், நேற்றிரவு அங்குள்ள காளியம்மன் கோவில் அருகே அருணை சுற்றிவளைத்த மர்மநபர்கள், அவர் மீது மிளகாய் பொடி தூவி கத்தி, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களால் வெட்டியுள்ளனர். இதில், படுகாயமடைந்த அருண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடலை கைப்பற்றி போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

திமுக பிரமுகர் படுகொலை – உறவினர்கள் சாலை மறியல்!

இந்நிலையில், அருண் கொலையில் தொடர்புடையவர்களை கைதுசெய்ய கோரி அவது உறவினர்கள் பழநி – திருச்சி சந்திப்பு சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஏடிஎஸ்பி இனிகோ திவ்யன், சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருவதாகவும், கொலையாளிகளை விரைவில் கைதுசெய்யப்படுவார்கள் என்றும் அவர் உறுதி அளித்ததை அடுத்து, மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.