‘பெண்களை வைத்து பாலியல் தொழில்’ வசமாக சிக்கிய திமுக நிர்வாகி!

 

‘பெண்களை வைத்து பாலியல் தொழில்’ வசமாக சிக்கிய திமுக நிர்வாகி!

மதுரை அருகே பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வந்த திமுக நிர்வாகி கைது செய்யப்பட்டார்.

மதுரை ஆத்திக்குளம் பகுதியில் பாலியல் தொழில் நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்திருக்கிறது. அந்த தகவலின் படி, விபச்சார தடுப்புப் பிரிவு ஆய்வாளர் அப்பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அங்கு ஒரு நபர் 2 பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வந்தது அம்பலமானது. போலீசாரை கண்டதும் அங்கிருந்தவர்கள் தப்பியோட முயன்றதாக தெரிகிறது.

‘பெண்களை வைத்து பாலியல் தொழில்’ வசமாக சிக்கிய திமுக நிர்வாகி!

அவர்களை மடக்கி பிடித்த போலீசார், அங்கிருந்த 3 பெண்களையும் 5 ஆண்களையும் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் கைதானவர்களுள் ஒருவரான பூசமலை, மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள தேவசேரி பகுதியை சேர்ந்த திமுக கிளைச் செயலாளர் என்பதும் அவர் பெண்களை வைத்து தொழில் செய்து வருவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்கள் அனைவரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய போலீசார், நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைத்தனர்.