எம்பி கனிமொழி பங்கேற்ற நிகழ்ச்சியில் திமுக – மதிமுகவினர் மோதல்

 

எம்பி கனிமொழி பங்கேற்ற நிகழ்ச்சியில் திமுக – மதிமுகவினர் மோதல்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள தெற்கு திட்டங்குளத்தில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து அமைக்கப்பட்ட உயர்மின்கோபுரம் திறப்பு விழா நடைபெற்றது. இதில் கனிமொழி எம்பி கலந்து கொண்டு உயர் மின் கோபுரம் செயல்பாட்டினை தொடங்கி வைத்து பேசினார்.

எம்பி கனிமொழி பங்கேற்ற நிகழ்ச்சியில் திமுக – மதிமுகவினர் மோதல்

அப்போது மதிமுகவை சேர்ந்த பசுபதி என்பவர் கூட்டணி கட்சியான மதிமுக பெயரை நிகழ்ச்சியில் கூறாமல் புறக்கணித்தாக கூறி வாக்குவாதம் செய்தார். இதனை தொடர்ந்து திமுக – மதிமுக தொண்டர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. கனிமொழி எம்பி பங்கேற்ற நிகழ்ச்சியில் மோதல் ஏற்பட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.‌ இதனை தொடர்ந்து அங்கிருந்த போலீசார் இரு தரப்பினையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.