தடையை மீறி கிராம சபைக் கூட்டத்தை நடத்தும் மு.க ஸ்டாலின்!

 

தடையை மீறி கிராம சபைக் கூட்டத்தை நடத்தும் மு.க ஸ்டாலின்!

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் திமுகவினர் தடையை மீறி கிராம சபைக் கூட்டம் நடத்தி வருகின்றனர்.

காந்தி ஜெயந்தி, குடியரசு, சுதந்திர தினங்களில் கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்படுவது வழக்கம். ஆனால் இந்த முறை கொரோனா பாதிப்பால், கிராம சபைக் கூட்ட முன்னேற்பாடுகளில் சிக்கல் நீடித்தது. இதன் காரணமாக, இன்று காந்தி ஜெயந்தியையொட்டி நடைபெறவிருந்த கிராம சபைக்கூட்டம் ரத்து செய்யப்பட்டது. மேலும், எந்த பகுதியிலும் கூட்டங்கள் நடத்தக் கூடாது என அரசு அறிவிப்பு வெளியிட்டது.

தடையை மீறி கிராம சபைக் கூட்டத்தை நடத்தும் மு.க ஸ்டாலின்!

இந்த நிலையில், திமுக தலைவர் மு.க ஸ்டாலின் திருவள்ளூர் மாவட்டம், கொரட்டூர் ஊராட்சியில் தடையை மீறி கிராம சபை கூட்டத்தை நடத்தி வருகிறார். அதில் கலந்து கொண்ட கொரட்டூர், அகரவேல், நடுகுத்து உள்ளிட்ட கிராம மக்களிடம் குறைகளை கேட்டறிந்து வருகிறார். இதே போல, திருவள்ளூர் அயப்பாக்கம் ஊராட்சியில் திமுக பொருளாளர் டி.ஆர். பாலு தலைமையில் கூட்டம் நடைபெற்று வருகிறது.

தடையை மீறி கிராம சபைக் கூட்டத்தை நடத்தும் மு.க ஸ்டாலின்!

மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் திமுகவினர் கிராம சபை கூட்டம் நடத்தி வருகின்றனர். காஞ்சிபுரத்தில் கிராம சபை கூட்டம் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து திமுகவினர் வயலில் இறங்கி போராட்டம் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.