அடுத்த கட்ட பரப்புரை : முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறார் ஸ்டாலின்

 

அடுத்த கட்ட பரப்புரை : முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறார் ஸ்டாலின்

சட்டமன்ற தேர்தலையொட்டி அடுத்த கட்ட பிரச்சாரம் குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் இன்று காலை 11 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார்.

அடுத்த கட்ட பரப்புரை : முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறார் ஸ்டாலின்

சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் தமிழகத்தில் தேர்தல் பரப்புரை அனல்பறக்க நடந்து வருகிறது. அதிமுக சார்பில் முதல்வர் பழனிசாமி களமிறங்கியுள்ள நிலையில் திமுக சார்பில் தேர்தல் பரப்புரையில் உதயநிதி, கனிமொழி எம்.பி உள்ளிட்டோர் கலந்து கொண்டு மக்களை சந்தித்து வருகின்றனர். அத்துடன் திமுக தலைவர் ஸ்டாலின், மக்கள் கிராம சபை என்ற பெயரில் மக்களை நேரடியாக சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டும், அதிமுக அரசின் குறைகளையும், ஊழல்களையும் மக்கள் மத்தியில் முன்வைத்து வருகிறார்.

அடுத்த கட்ட பரப்புரை : முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறார் ஸ்டாலின்

இந்நிலையில் சட்டமன்ற தேர்தலையொட்டி அடுத்தகட்ட பிரச்சாரத்தை இன்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவிக்கிறார். சென்னை கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதி இல்லத்தில் காலை 11 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார். 234 தொகுதிகளிலும் பிரச்சாரம் செய்யும் நோக்கில் அடுத்த அறிவிப்பை இன்று மு.க. ஸ்டாலின் இன்று வெளியிடுகிறார்.

அடுத்த கட்ட பரப்புரை : முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறார் ஸ்டாலின்

‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற 30 நாள் பிரச்சாரத்தை ஜனவரி 29இல் திருவண்ணாமலையில் தொடங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே கிராம மக்கள் சபை கூட்டம் மூலம் மக்களை சந்தித்து வந்த நிலையில் ஸ்டாலின் அடுத்த பிரச்சாரம் குறித்து அறிவிக்கிறார்.