மாவட்ட செயலாளர்களுடன் திமுக தலைவர் ஸ்டாலின் ஆலோசனை!

 

மாவட்ட செயலாளர்களுடன் திமுக தலைவர் ஸ்டாலின் ஆலோசனை!

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த வியாழக்கிழமை பஞ்சாப், ஹரியானா,ராஜஸ்தான் மாநில விவசாயிகள் முன்னெடுத்த போராட்டம் இன்று வரை நீடிக்கிறது. போலீசாரின் பல்வேறு தடைகளை தகர்த்து முன்னேறிச் சென்ற விவசாயிகள், டெல்லியின் புராரி மைதானத்தில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் டெல்லியில் பதற்றம் நீடித்து வரும் சூழலில், டிச.3ம் தேதி விவசாயிகளுடன் பேச்சு வார்த்தை நடத்த மத்திய அரசு அழைப்பு விடுத்தது.

மாவட்ட செயலாளர்களுடன் திமுக தலைவர் ஸ்டாலின் ஆலோசனை!

ஆனால், போராட்டம் நாளுக்கு நாள் வலுப்பெற்றுக் கொண்டே இருந்ததால் கடந்த 1ம் தேதியே விவசாய அமைப்புகளுடன் திடீர் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அது தோல்வியில் முடிந்த நிலையில், முன்னதாக அறிவிக்கப்பட்டதன் படி இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடக்கவிருக்கிறது.

இந்த நிலையில், டெல்லி போராட்டம் குறித்து திமுக தலைவர் மு.க ஸ்டாலின் மாவட்ட செயலாளர்களிடம் ஆலோசனை நடத்தி வருகிறார். அண்ணா அறிவாலயத்தில் இருந்து காணொளி காட்சி வாயிலாக ஆலோசனை நடக்கிறது. இதன் முடிவில், விவசாயிகளுக்கு ஆதரவாக திமுக போராட்டத்தை அறிவிக்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.