நோயாளிகளின் மீது தனி அக்கறை செலுத்தி முழு நலன் பெறப் பாடுபட்ட டாக்டர் சந்திரமோகன் மறைவு அதிர்ச்சியளிக்கிறது- ஸ்டாலின்

 

நோயாளிகளின் மீது தனி அக்கறை செலுத்தி முழு நலன் பெறப் பாடுபட்ட டாக்டர் சந்திரமோகன் மறைவு அதிர்ச்சியளிக்கிறது- ஸ்டாலின்

குடல், இரைப்பை அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் எஸ்.எம். சந்திரமோகன் இன்று மாரடைப்பால் உயிரிழந்தார். இவர் சென்னை ராஜூவ்காந்தி அரசு மருத்துவமனையில் Surgical Gastroenterology துறையை உருவாக்கியவர் ஆவார். சந்திரமோகன்சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் குடல் அறுவை சிகிச்சை பிரிவில் பணியாற்றி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்றவர்.

நோயாளிகளின் மீது தனி அக்கறை செலுத்தி முழு நலன் பெறப் பாடுபட்ட டாக்டர் சந்திரமோகன் மறைவு அதிர்ச்சியளிக்கிறது- ஸ்டாலின்

இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், “குடல் அறுவை சிகிச்சை மருத்துவத்தில் புகழ்பெற்றவரான டாக்டர் எஸ்.எம்.சந்திரமோகன் அவர்களின் மரணம் அதிர்ச்சியையும் கவலையையும் அளிக்கிறது. மருத்துவத் துறைக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டு, ராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையிலும், இராயப்பேட்டை அரசு மருத்துவமனையிலும் நோயாளிகளின் மீது தனி அக்கறை செலுத்தி அவர்கள் முழு நலன் பெறப் பாடுபட்ட டாக்டர் சந்திரமோகன் அவர்களின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது பிரிவால் வாடும் குடும்பத்தார் – உறவினர்கள் – நண்பர்கள் – மருத்துவத்துறையினர் அனைவருக்கும் கழகத்தின் சார்பில் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.