“அணையப்போகும் விளக்கு பிரகாசமாக எரியும் என்பது போல முதல்வர் செயல்பட்டு வருகிறார்” : மு.க.ஸ்டாலின்

 

“அணையப்போகும் விளக்கு பிரகாசமாக எரியும் என்பது போல முதல்வர் செயல்பட்டு வருகிறார்” : மு.க.ஸ்டாலின்

அணையப்போகும் விளக்கு பிரகாசமாக எரியும் என்பது போல முதல்வர் செயல்பட்டு வருகிறார் என்று மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

“அணையப்போகும் விளக்கு பிரகாசமாக எரியும் என்பது போல முதல்வர் செயல்பட்டு வருகிறார்” : மு.க.ஸ்டாலின்

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பெயரில் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். கடந்த 29 ஆம் தேதி முதல் திருவண்ணாமலையில் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வரும் ஸ்டாலின், கல்வி கடன் ரத்து, விவசாயக்கடன் ரத்து போன்ற வாக்குறுதிகளை மக்கள் மத்தியில் தெரிவித்தார். ஆனால் விவசாய கடன் ரத்து செய்யப்படுவதாக முதல்வர் பழனிசாமி நேற்று சட்டப்பேரவையில் அறிவித்தார்.

“அணையப்போகும் விளக்கு பிரகாசமாக எரியும் என்பது போல முதல்வர் செயல்பட்டு வருகிறார்” : மு.க.ஸ்டாலின்

இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் பிரச்சாரத்தில், திமுக தலைவர் முக ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், 25 ஆண்டுகால கட்சிப் பணிகளுக்கு பிறகே சட்டமன்றம் சென்றேன். முதல்வர் இன்னும் பல அறிவிப்புகளை வெளியிடுவார்; ஆனால் விவசாயிகள், மக்கள் ஏற்க மாட்டார்கள். அணையப்போகும் விளக்கு பிரகாசமாக எரியும் என்பது போல முதல்வர் செயல்பட்டு வருகிறார். முதல்வர் பேச்சை அமைச்சர்கள் கேட்பதில்லை என்றும் தமிழகத்தில் அரைகுறை ஆட்சி நடக்கிறது என்றார்.