“ஒரே நாளில் 2 முக்கிய நிகழ்வுகள்” ஸ்டாலினின் தரமான செய்கை; ஆவலுடன் திமுகவினர்..!

 

“ஒரே நாளில் 2 முக்கிய நிகழ்வுகள்”  ஸ்டாலினின் தரமான செய்கை; ஆவலுடன் திமுகவினர்..!

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று வேட்புமனுத்தாக்கல் செய்வதுடன் இன்று தனது சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தையும் தொடங்குகிறார்.

“ஒரே நாளில் 2 முக்கிய நிகழ்வுகள்”  ஸ்டாலினின் தரமான செய்கை; ஆவலுடன் திமுகவினர்..!

சட்டப்பேரவை தேர்தல் வரும் 6-ஆம் தேதி நடைபெறுகிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் ,விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள்,தமிழக வாழ்வுரிமைக் கட்சி, கொங்கு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட பல கட்சிகள் இடம்பெற்றுள்ளன . இவை அனைத்திற்கும் தொகுதி பங்கீடு ,தொகுதி பட்டியல் தனித்தனியாக அறிவிக்கப்பட்டுவிட்டது.அடுத்த கட்டமாக வேட்புமனுத்தாக்கல் , பரப்புரை என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் களமிறங்க உள்ளார்.

“ஒரே நாளில் 2 முக்கிய நிகழ்வுகள்”  ஸ்டாலினின் தரமான செய்கை; ஆவலுடன் திமுகவினர்..!

இந்நிலையில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் திமுக தலைவர் ஸ்டாலின் இன்று மதியம் 12 .15க்கு வேட்புமனுத்தாக்கல் செய்கிறார். அயனாவரத்தில் பழைய ஆறாவது மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் வேட்புமனுவை தாக்கல் செய்கிறார். அதே சமயம் திமுக தலைவர் மு .க . ஸ்டாலின் இன்று முதல் தனது சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார் .திருவாரூர் தெற்கு ரத வீதியில் மாலை 5.30 மணிக்கு பிரச்சாரத்தை தொடங்குகிறார் திமுக தலைவர் ஸ்டாலின். இதனால் வேட்புமனு தாக்கலை முடித்துக்கொண்டு அவர் திருவாரூருக்கு பயணம் மேற்கொள்கிறார்.

“ஒரே நாளில் 2 முக்கிய நிகழ்வுகள்”  ஸ்டாலினின் தரமான செய்கை; ஆவலுடன் திமுகவினர்..!

முன்னதாக திமுக தேர்தல் அறிக்கையில் பல முக்கிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை , கல்வி கடன் ரத்து ,நகை கடன் ரத்து, பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும் – டீசல் விலை லிட்டருக்கு 4 ரூபாயும் குறைக்கப்படும், தமிழக குடும்பங்களுக்கு நிவாரணத் தொகையாக தலா 4 ஆயிரம் ரூபாய் ,அதிமுக அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்கப்படும் உள்ளிட்ட பல அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.