‘அதிமுக எப்போதும் திமுகவின் எதிரி தான்’ – கனிமொழியின் ஆவேசப் பேச்சு!

 

‘அதிமுக எப்போதும் திமுகவின் எதிரி தான்’ – கனிமொழியின் ஆவேசப் பேச்சு!

தமிழக சட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்கி ‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ என்ற வாசகத்தை முன் வைத்து திமுக எம்.பி கனிமொழி அனல்பறக்கும் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் பிரச்சாரம் செய்த கனிமொழி, ஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பிழப்பால் நெசவுத்தொழில் நலிவடைந்துள்ளது. அதை மேம்படுத்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அமைச்சர் தங்கமணி தனது உறவினருக்கே சாய சலவை அமைக்க அனுமதி கொடுத்திருக்கிறார். ஏற்கனவே இருக்கும் பிரச்னைக்கு இன்னும் தீர்வு காணவில்லை என்று அரசின் மீது குற்றஞ்சாட்டினார்.

‘அதிமுக எப்போதும் திமுகவின் எதிரி தான்’ – கனிமொழியின் ஆவேசப் பேச்சு!

தொடர்ந்து உலக சந்தையில் குறைந்து வரும் பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு உயர்த்திக் கொண்டே போவதாக குற்றஞ்சாட்டிய கனிமொழி, நீட் தேர்வு விவாகாரத்தில் அரசின் வாதம் எல்லாம் கண்துடைப்பு தான் என்றும் நீட் தேர்வை ரத்து செய்வதில் ஸ்டாலின் உறுதியாக இருக்கிறார் என்றும் தேர்தலை சந்திக்க திமுக தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும், விவசாயம் மற்றும் நெசவாளர்களுக்கு இலவச மின்சாரத்தை கேள்விக் குறியாக்கிய அதிமுக தான் திமுகவின் எதிரி என்றும் ஆவேசமாக கூறினார்.