திமுக முன்னாள் மாவட்டக் கழகசெயலாளர் எல்.பலராமன் கொரோனாவால் மரணம்!

 

திமுக முன்னாள் மாவட்டக் கழகசெயலாளர் எல்.பலராமன் கொரோனாவால் மரணம்!

திமுகவின் மாவட்ட நிர்வாகம் வடசென்னை மற்றும் தென் சென்னையாக இருந்த போது, வட சென்னையின் திமுக மாவட்ட செயலாளராக இருந்தவர் எல். பலராமன் (78). திமுக வில் இருந்து வைகோ வெளியேற்றப்பட்ட சமயம் ஏற்பட்ட பிளவின் போது, வட சென்னையை கட்டிக்காத்தவர்களுள் முக்கியமானவர் இவர். சில நாட்களுக்கு முன்னர் இவருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டதால் கடந்த 19 ஆம் தேதி இவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உலகையே உலுக்கி எடுத்து வரும் கொரோனா வைரஸால் அவர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவுக்கு மு.க ஸ்டாலின் மற்றும் தயாநிதிமாறன் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

திமுக முன்னாள் மாவட்டக் கழகசெயலாளர் எல்.பலராமன் கொரோனாவால் மரணம்!

தயாநிதிமாறன் அவரது ட்விட்டர் பக்கத்தில், “முன்னாள் வடசென்னை மாவட்டக் கழகசெயலாளரும், தணிக்கை குழு உறுப்பினருமான அருமை அண்ணன் எல்.பலராமன் அவர்களின் மறைவு என்பது கழகத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும், அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கும், கழகத் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.