‘ பணம் கேட்டு பைனான்ஸ் அதிபர் கடத்தல்’ கம்பி எண்ணும் திமுக முன்னாள் கவுன்சிலர்!

 

‘ பணம் கேட்டு பைனான்ஸ் அதிபர் கடத்தல்’ கம்பி எண்ணும் திமுக முன்னாள் கவுன்சிலர்!

பொள்ளாச்சி அருகே பைனான்ஸ் அதிபர் கடத்தப்பட்ட வழக்கில் திமுக முன்னாள் கவுன்சிலர் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொள்ளாச்சி சி. டி. சி .காலனியில் வசித்து வருபவர் பைனான்சியர் சாந்தகுமார். இவரை கடந்த 2 நாட்களுக்கு முன்னர் 4 பேர் கொண்ட கும்பல் கை, கால்களை கட்டி காரில் கடத்திச் சென்றுள்ளனர். தாமரைக் குளம் பகுதிக்கு கடத்தி சென்ற நபர்கள், அவரிடம் ரூ.1 கோடி கேட்டு மிரட்டியுள்ளனர். அதற்கு சாந்தகுமார் மறுப்பு தெரிவிக்க, அந்த நபர்கள் அவரை கடுமையாக தாக்கியுள்ளனர். கத்தியை காட்டியும் மிரட்டி இருக்கின்றனர்.

‘ பணம் கேட்டு பைனான்ஸ் அதிபர் கடத்தல்’ கம்பி எண்ணும் திமுக முன்னாள் கவுன்சிலர்!

இருப்பினும் சாந்தகுமார் பணம் கொடுக்க ஒப்புக் கொள்ளாததால், அவரை கிணத்துகடவு சாலையில் வீசிச் சென்றுள்ளனர். இதனையடுத்து தன்னை கடத்தி பணம் கேட்டு மிரட்டியதாக சாந்தகுமார், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், பொள்ளாச்சி நகர 26வது வார்டு முன்னாள் கவுன்சிலர் கமலக்கண்ணன் சாந்தகுமாரை கடத்தியது தெரிய வந்தது. அவருடன் 3 பேர் கடத்தலில் ஈடுபட்டுள்ளனர்.

‘ பணம் கேட்டு பைனான்ஸ் அதிபர் கடத்தல்’ கம்பி எண்ணும் திமுக முன்னாள் கவுன்சிலர்!

இதனையடுத்து அவர்களை பிடிக்க தனிப்படை அமைத்த போலீசார், திமுக முன்னாள் கவுன்சிலர் கமலக்கண்ணனை கைது செய்துள்ளனர். மற்ற மூவரை போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர்.