மரத்தின் மீது கார் மோதிய விபத்தில், திமுக நிர்வாகி பலி!
திருப்பூர்
தாராபுரம் அருகே மரத்தின் மீது கார் மோதிய விபத்தில், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் பழனிச்சாமி உயிரிழந்தார்.
திருப்பூர் மாவட்டம் மணக்கடவை பகுதியை சேர்ந்தவர் வீரசுந்தரி என்கிற பழனிச்சாமி. இவர் திமுக தலைமை செயற்குழு உறுப்பினராகவும், 12-வது வார்டு கவுன்சிலராகவும் இருந்து வந்தார்.
இந்த நிலையில், பழனிச்சாமி இன்று மதியம் தனது காரில் தாராபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது, திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மரத்தின் மோதி விபத்திற்கு உள்ளானது.
இதில் படுகாயம் அடைந்த பழனிச்சாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்த தாராபுரம் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வாக்குப்பதிவு தினத்தில் திமுக நிர்வாகி உயிரிழந்த சம்பவம் தாராபுரத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.