தொகுதி உடன்பாடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த திமுக குழு அமைப்பு

 

தொகுதி உடன்பாடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த திமுக குழு அமைப்பு

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. வேட்பாளர்களை களமிறக்க தயாராக இருக்கும் பிரதான கட்சிகள், அதற்கு முன்னதாக கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகளை நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளன. அதன் படி, காங்கிரஸுடன்,திமுக பேச்சுவார்த்தை நடத்தியது. காங்கிரஸ் உடன் கூட்டணி பேச்சுவார்த்தை உறுதியான நிலையில், தொகுதி பங்கீடு சுமூக நிலையை எட்டவில்லை.

தொகுதி உடன்பாடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த திமுக குழு அமைப்பு

இந்நிலையில் தொகுதி உடன்பாடு குறித்து திமுக சார்பில் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு தலைவராக திமுக பொருளாளர் டி.ஆர். பாலு நியமிக்கப்பட்டுள்ளார். இந்த குழுவின் உறுப்பினராக ஐந்துபேர் நியமிக்கப்பட்டுள்ளதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளார். அதில் திமுக முதன்மை செயலாளர் கே.என். நேரு, துணை பொதுச்செயலாளர்கள் க. பொன்முடி, பெரியசாமி, சுப்புலெட்சுமி ஜெகதீசன், திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி மற்றும் உயர்நீலை திட்டக்குழு உறுப்பினரான எ.வ.வேலு ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.