” 24 மணிநேரத்துல உங்களுக்கு கட்டம் கட்டிடுவேன்” துரைமுருகன் எச்சரிக்கை!!

 

” 24 மணிநேரத்துல உங்களுக்கு கட்டம் கட்டிடுவேன்” துரைமுருகன் எச்சரிக்கை!!

சட்டமன்ற தேர்தல் நாளை மறுநாள் நடக்கவுள்ள நிலையில் திமுக, அதிமுக ,மக்கள் நீதி மய்யம், அமமுக உள்ளிட்ட கட்சிகளின் கூட்டணியின் கீழ் தேர்தல் நடக்கவிருக்கிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் ,விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள், இந்தியன் முஸ்லீம் லீக்,மனித நேய மக்கள் கட்சி உள்ளிட்ட பல கட்சிகள் இடம் பெற்றுள்ளனர். அதேபோல் அதிமுக கூட்டணியில் பாஜக ,பாமக, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் உள்ளன. அதே போல் இந்த முறை திராவிட கட்சிகளுக்கு மாற்றாக களமிறங்கியுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியில் சமத்துவ மக்கள் கட்சி, புதிய ஜனநாயகக் கட்சி ஆகியவை இடம்பெற்றுள்ளன.இந்த சூழலில் திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளில் திமுகவினர் தேர்தல் பணிகளில் சரியாக ஈடுபடவில்லை என்று குற்றச்சாட்டு பரவலாக உள்ளது.

” 24 மணிநேரத்துல உங்களுக்கு கட்டம் கட்டிடுவேன்” துரைமுருகன் எச்சரிக்கை!!

இந்நிலையில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வாணியம்பாடி தொகுதி திமுக கூட்டணி கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் முகமது நயீமை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர்,”திமுகவினர் யாராவது தேர்தலில் சுணக்கம் காட்டினால் அடுத்த 24 மணிநேரத்தில் கட்டம் கட்டி விடுவேன். திமுக வேட்பாளர் வேறு; இந்திய யூனியன் முஸ்லிம் லீக்வேட்பாளர் வேறு இல்லை. இது திமுக வரலாற்றை அறிந்த அனைவருக்கும் தெரியும். திமுக என்ற இந்த மாபெரும் இயக்கத்தை முதலில் தொட்டிலில் போட்டு வளர்த்தது இஸ்லாமிய மேடைகள் தான். இஸ்லாமிய சமுதாயம் திமுகவுக்கு வளர்ப்பு தாய் போன்றது” என்றார்.

” 24 மணிநேரத்துல உங்களுக்கு கட்டம் கட்டிடுவேன்” துரைமுருகன் எச்சரிக்கை!!

தொடர்ந்து பேசிய அவர், “கடந்த 10 ஆண்டுகளாக இருந்த இருண்ட காலம் நீங்கும் நாள் வந்துவிட்டது. மக்கள் யோசித்து வாக்களியுங்கள். யோசிக்காமல் வாக்குகளை வாரி வழங்காதீர்கள். ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி முதல் மும்முனை மின்சாரம் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். ஏப்ரல் 1ஆம் தேதி கடந்துவிட்டது. அவர் நம்மை ஏப்ரல் ஃபூல் ஆக்க பார்க்கிறார். மிஸ்டர் எடப்பாடி முட்டாள் நாங்கள் அல்ல; நீங்கள் தான்” என்றார்.