மின்கட்டணத்தில் குளறுபடி செய்ததே அமைச்சர் தங்கமணி தான்: துரைமுருகன் குற்றச்சாட்டு

 

மின்கட்டணத்தில் குளறுபடி செய்ததே அமைச்சர் தங்கமணி தான்: துரைமுருகன் குற்றச்சாட்டு

தமிழக மின் கட்டணம் ரீடிங்கில் குளறுபடி நடந்துள்ளதாக திமுக தலைவர் மு.க ஸ்டாலின் குற்றஞ்சாட்டியிருந்தார். இது குறித்து நேற்று பேசிய அமைச்சர் தங்கமணி, மின் கட்டணம் கூடுதலாக கணக்கீடு என ஸ்டாலின் கூறும் புகாரில் எள்ளளவும் உண்மை இல்லை என்றும் மக்களை திசை திருப்பும் காரியத்தில் ஸ்டாலின் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது என்றும் கூறினார். மேலும் ஸ்டாலின் காண்பித்தது வீட்டு மின்நுகர்வோரின் ஆவணம் இல்லை, தொழில் மின்நுகர்வோரின் ஆவணம் என்றும் தெரிவித்திருந்தார்.

மின்கட்டணத்தில் குளறுபடி செய்ததே அமைச்சர் தங்கமணி தான்: துரைமுருகன் குற்றச்சாட்டு

இந்த நிலையில் அமைச்சர் தங்கமணி பேசியதற்கு விளக்கம் அளித்து திமுக பொருளாளர் துரைமுருகன் காட்பாடியில் பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், கறுப்பர் கூட்டத்துக்கும் திமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, அதற்கான தேவையும் இல்லை. மின் கட்டணத்தில் குளறுபடி செய்ததே அமைச்சர் தங்கமணி தான் என்று கூறினார். மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வந்துள்ளதால் தங்கமணி குழம்பி போய் உள்ளார் என்றும் கூறினார்.