‘எந்த ஊரில் வாரிசு அரசியல் இல்லை? பாஜகவிலும் அது நடக்கிறது’ : துரைமுருகன் காட்டம்!

 

‘எந்த ஊரில் வாரிசு அரசியல் இல்லை? பாஜகவிலும் அது நடக்கிறது’ : துரைமுருகன் காட்டம்!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திமுகவை மிரட்டுவது போல பேசியிருப்பதாக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

‘எந்த ஊரில் வாரிசு அரசியல் இல்லை? பாஜகவிலும் அது நடக்கிறது’ : துரைமுருகன் காட்டம்!

வேலூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த துரைமுருகன், எந்த ஊரில் வாரிசு அரசியல் இல்லை? இது போன்று எல்லாம் அமித்ஷா பீகாரில் தான் பேச வேண்டும். பாஜகவிலும் நிறைய பேர் வாரிசு அரசியல் செய்கிறார்கள். அவற்றை எல்லாம் ஒழித்துவிட்டாரா அமித்ஷா? என கேள்வி எழுப்பினார். மேலும், திமுகவை மிரட்டுவது போல் அமித்ஷா அரசு விழாவில் பேசியதாக குற்றஞ்சாட்டிய அவர், அரசு விழா மேடையை அரசியல் மேடையாக மாற்றி எதிர்கட்சியை அமித்ஷா வசைபாடியிருக்கிறார் என்றும் அரசியலுக்கும் அரசுக்கும் வித்தியாசம் தெரியாமல் போனால் ஜனநாயகம் அழிந்து சர்வாதிகாரம் தலைதூக்கும் என்றும் தெரிவித்தார்.

‘எந்த ஊரில் வாரிசு அரசியல் இல்லை? பாஜகவிலும் அது நடக்கிறது’ : துரைமுருகன் காட்டம்!

அரசு சார்பில் நேற்று கலைவாணர் அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்ட விழாவில் பங்கேற்ற அமித்ஷா, நிகழ்ச்சியில் பேசிய போது திமுகவை விமர்சித்து பேசியிருந்தார். அதிமுக – பாஜக கூட்டணியை அரியணை ஏற்றுவது தான் எனது கடமை என்றும் கூறியிருந்தார். அதற்கு பதில் அளிக்கும் விதமாக, செய்தியாளர்கள் சந்திப்பில் துரைமுருகன் பேசியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.