“ரெய்டு பூச்சாண்டிக்கு திமுக அஞ்சாது” : துரைமுருகன் பேட்டி!!

 

“ரெய்டு பூச்சாண்டிக்கு திமுக அஞ்சாது” : துரைமுருகன் பேட்டி!!

அடக்குமுறைக்கு திமுக ஒருபோதும் அஞ்சியது கிடையாது என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

“ரெய்டு பூச்சாண்டிக்கு திமுக அஞ்சாது” : துரைமுருகன் பேட்டி!!

சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு
வருகின்றனர். இந்த சூழலில் தமிழகத்தில் முக்கிய புள்ளிகள் வீட்டில் ஐடி ரெய்டு நடந்து வருகிறது. சமீபத்தில் திமுக வேட்பாளர் எ.வ. வேலு வீடு, அலுவலகம், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை செய்தனர். அந்த வகையில் இன்று சென்னை நீலாங்கரையில் உள்ள ஸ்டாலின் மகள் செந்தாமரை , மருமகன் சபரீசன் இல்லத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். அத்துடன் அண்ணா நகர் திமுக வேட்பாளர் மகன் கார்த்திக் மோகனின் வீட்டிலும் வருமான வரித்துறை சோதனை செய்து வருகின்றனர்.

“ரெய்டு பூச்சாண்டிக்கு திமுக அஞ்சாது” : துரைமுருகன் பேட்டி!!

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், “மிசா காலத்திலும் வருமான வரித்துறை சோதனை நடந்தது. எந்த சலனமும் இன்றி பணியாற்றினார் கருணாநிதி.தந்தை கருணாநிதியை விட இரும்பு நெஞ்சம் கொண்டவர் ஸ்டாலின். ஸ்டாலினை பயமுறுத்தி விடலாம் என நினைப்பது அப்பாவித்தனம். மத்திய அரசின் இந்த போக்கு ஜனநாயகம் அல்ல.வருமான வரி சோதனை நடத்தும் மத்திய அரசின் செயலை வன்மையாக கண்டிக்கிறேன். அடக்குமுறைக்கு திமுக ஒருபோதும் அஞ்சியது கிடையாது.மகள் செந்தாமரை வருத்தப்பட்டால் ஸ்டாலின் மனம் தாங்கமாட்டார் என நினைக்கிறார்கள். திமுகவினர் வீடுகளில் சோதனை நடத்துவது பயமுறுத்துவதற்கு தான். இதுபோன்ற பூச்சாண்டிக்கு திமுக எப்போதும் அஞ்சாது” என்றார்.